Archive for the ‘தொடர்’ Category

சாதிக் கொடுமையின் மற்றொரு சாட்சி!

மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சியும் துயரமும் அளவிட முடியாதவை. தகுதியும் திறமையும் மிகுந்தவர்கள் என்று கருதப்படுவோரால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனமான இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். துடிப்பான ஆய்வு மாணவர்.

‘அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்’ (ஏ.எஸ்.ஏ.) என்ற அமைப்பின் உறுப்பினர். இச்சங்க உறுப்பினர்களுக்கும் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

பரிஷத் மாணவர்களின் புகாரின்பேரில் ஏ.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த ரோஹித் உள்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப் பட்டனர். ‘இந்த 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம் ஆனால் விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்துக்கோ, இதர பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சமூகரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பட்டமான சமூகப் புறக்கணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு எதிராக 5 மாணவர்களும் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில்தான் ரோஹித் வெமுலா என்ற அந்த ஆய்வு மாணவர் தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கையையும் ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்போ, காரணமோ அல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுதானா?

அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பில் தீவிரவாதிகளும் தேச விரோதிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தை அடுத்தே தற்கொலை நடந்தது என்று மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பண்டாரு தத்தாத்ரேய, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் பி. அப்பா ராவ் மற்றும் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த 2 தீவிர உறுப்பினர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரோஹித் தின் மரணம் குறித்து மனசாட்சியுடன் விசாரணை நடத்தி உண்மை களைக் கண்டறிய வேண்டும். சாதி ஆதிக்கத்தையும் சாதிப்பாகுபாட்டை யும் தடுக்க நாம் தொடர்ந்து தவறிவருகிறோம் என்ற அவலத்தையே இது இந்திய அரசுக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

இரண்டு மாதங்கள் கடந்தது , மூர்த்திக்கு கம்பெனியில் இருந்து மெயில் வந்தது , இந்தமுறை உடனடியாக வேலைக்கு வந்து சேர வேண்டும் என்றும் , ட்ரைனிங் சென்னையில் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. உடனடியாக தனது சீனியர்க்கு கால் செய்து “அண்ணா ! ஒரு நல்ல செய்தி , கம்பெனியில் இருந்து மெயில் வந்து ஜாயின் பண்ணச் சொல்லி! “என்றான் .

ஹேய்! கன்கிராட்ஸ் ! எப்ப , என்ன வரும் என்று தெரியாது இதுதான் IT !” என்று பஞ்ச் அடிச்சார் சீனியர் ராஜ்! கூடவே எங்கு போவது , தங்குவது ,என்ன சொல்லித் தருவார்கள் போன்ற விவரங்களைச் சொன்னார்.

தேங்க்ஸ் அண்ணா ! சென்னை போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லி, போன் காலை கட் செய்தான். அடுத்து அவன் நண்பன் கார்த்திக்கு அந்தத் தகவலைச் சொல்லும் பொழுதே ,அவனுக்கு கிருத்திகா நியாபகம் வந்தது.

அட ! இந்த கிருத்திகா நம்பர் கொடுத்து இருந்தால் சொல்லி இருக்கலாம், இந்த பொண்ணுங்க நம்பர் வாங்கி அப்டி என்ன பண்ணிட போறோம்! நான் நம்பர் கொடுத்தும் இந்த பொண்ணு ஒரு மெசேஜ் கூட பண்ணலயே ,அட பிரண்ட்ஸா கூட பழக மாட்டங்களோ  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு ஞாயிறு அன்று கோவையில் இருந்து சென்னைக்கு பேருந்து ஏறினான்! ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து , அப்படியே சென்னைல வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று நினைத்தவாறே போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான், அப்படியே தூங்கி விட்டான்.

பேருந்து சேலம் வந்த பொழுது , விழித்துக் கொண்டவனுக்கு ஆச்சர்யம்! ஆமாம் அவன் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

ஹாய் , இது கிருத்திகா!

அவ்வளவுதான் , வேற எந்தத் தகவலும் இல்லை!

இந்த பொண்ணுங்க !எப்பவும் இப்படியா , இல்லை இப்பத்தான் இப்படியா ? ஒரு கால் பண்ண மாட்டாங்களா?என்று சொல்லிக் கொண்டே கால் செய்தான்!  மொபைல் ரிங் சத்தம் பக்கத்தில் கேட்பது போல் இருந்தது!ஆமாம் , கிருத்திகாவும் அதே பேருந்தில் இரண்டு சீட்ஸ் தள்ளி தனது தோழியுடன் அமர்ந்திருந்தாள்!

நம்மாளுக்கு இது கனவா , நினைவா என்றே தெரியவில்லை! பஸ்ஸை விட்டு தனியே பறந்து கொண்டிருப்பதைப் போல ஒரு பீலிங்க்ஸ்!!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#2

ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?!

ஜாதிய உணர்வு என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. அதனை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் முயற்சி செய்தால் எதிர் கால சந்ததி நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது உடனடி நிகழ்வல்ல!

ஜாதிய ஒழிப்பு என்று பேசினாலே அம்பேத்கர் கூறிய அகமண திருமண முறை பற்றி எல்லோருக்கும் நினைவு வரும். ஜாதி மாற்றித் திருமணம் செய்வதுதான் அது. அப்படிச் செய்தால் ஜாதி ஒழியும்.

பெரியார் முன் வைத்த அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம்.

அனைவரும் கோவிலில் வழிபடும் முறை.

தீண்டாமை பெருங்குற்றம் என்ற விழிப்புணர்வு.

ஜாதி பற்றிய புரிதலை குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஜாதி என்றால் என்ன?ஏன் அது வந்தது?எப்படி வந்தது? அதனால் உண்மையில் நன்மை உண்டா ? யாருக்கு அதிலே நன்மை என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் .

நம் ஜாதி உயர்ந்தது என்று சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை, அதே சமயம் மற்ற ஜாதி தாழ்ந்தது என்று சொல்லிக் கொடுப்பது தவிர்க்கப் பட வேண்டும் .

நீ என்ன ஜாதி என்று  கேட்பவர்களை தனிமைப் படுத்த வேண்டும்.

கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.

ஜாதிய வன்முறைகளைத் தூண்டிவிடும்  கட்சிகளைத்  தடை செய்ய வேண்டும்.

ஜாதி சங்ககங்களுக்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய கண்காணிப்பு வேண்டும்.

பள்ளி , கல்லூரிகளுக்கு ஜாதிப் பெயர்களை சூட்டுவதை தடை செய்ய வேண்டும்.

ஜாதிய வன்முறைகளின் தீமைககள்  பள்ளிக் , கல்லூரிப்  பாடங்களாக வேண்டும்.

மேல் நிலைப் பள்ளி வரை ஜாதிச் சான்றிதழ் கேட்க கூடாது.

ஜாதிய இட ஒதுக்கீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ஒதுக்கீட்டுக்கு வர வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

கவுரவக் கொலைகளுக்குத் கடுமையான தண்டனை தர வேண்டும்.

ஜாதிய வன்முறையத் தூண்டுபவர்களுக்குத் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குத் தண்டனையை அதிகப் படுத்த வேண்டும்.

பெரியார் பரிந்துரைத்த பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் வைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

பெற்றோரின் வளர்ப்பு என்பது இதிலே மிக முக்கியம். பெற்றோர்கள் சமூகப் பொறுப்புடன் இருந்தால் நல்லது.

வெறும் கல்வியோ , விழிப்புணர்வோ இதனைச் செய்து விட முடியாது.

ஜாதி என்ற போதையைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.

இளைஞர்கள் எல்லாவற்றிக்கும் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். ஜாதி என்ற கோட்பாட்டிலும் அதனைப் பின்பற்ற வேண்டும்.

எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம்.

ஜாதியின் பெயரால் போட்டி அரசியல் நடத்துவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு .

ஏற்றத் தாழ்வான சமுதாய முனேற்றம் என்பது , எப்பொழுதும் பிரச்சனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளைய சமூகம் தங்களுக்குள்ளே தனித் தீவாய்ப் போய்விடும்.

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு :சதி-சாதி-சா”தீ”!?!!#3

மூன்று மாதங்கள் கடந்தது, சாப்ட்வேர் வாழ்க்கையின் கனவில் இருந்தவனுக்கு தான் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் “நாங்கள் உங்களை எங்கள் கம்பெனிக்கு வரவேற்கிறோம். எங்கள் நிறுவனத்திற்குத்  தேர்ந்தெடுத்த உங்களைப் போன்ற பணியாளர்கள் ஒவ்வொருவரையும் ட்ரைனிங்கிற்கு கூப்பிட்ட வண்ணம் உள்ளோம். அதன் படி நீங்கள் இன்னும் இருமாதங்களில் ட்ரைனிங்கில் கலந்து கொள்ளலாம். அதற்க்கான அறிவுப்பு விரைவில் உங்களுக்கு அனுப்பப் படும்” என்ற தகவல் இருந்தது.


இதே போன்றதொரு தகவலை 30 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு அனுப்பி இருந்தார்கள்.அந்தக் குழுவில் கிருத்திகா என்ற பெண்ணும் ஒருவர். மூர்த்தி இந்த மெயில்லை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே , ஜிமெயில் சாட்டில் ஒரு அழைப்பு வருகிறது.

கிருத்திகா: ஹாய் மூர்த்தி,,,

here  கிருத்திகா,,,

(நம்ம ஆளு மனதிலே! கண்ணா லட்டு திங்க ஆசையா?!!)

மூர்த்தி : ஹாய் , கிருத்திகா! மூர்த்தி here

கிருத்திகா: 3 மாதம் கழிச்சு இப்போத்தான் முதல் மெயில் அனுப்பி இருக்காங்க?! எப்ப கூப்டுவாங்கனு ஏதாவது ஐடியா இருக்கா?

மூர்த்தி: ஆமாங்க! ஆனா தெரிலையே, கூப்டுவாங்க பயப்படதீங்க!

(மனதில் : இத வச்சுத்தான் என் கனவு வாழ்க்கையே இருக்கு. நம்மை மாதிரி இந்தப் பொண்ணும் பயப்படுதே!)

கிருத்திகா: இல்லைங்க , எங்க வீட்ல marriage பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க இப்டியே லேட் ஆகிட்டே இருந்தது என்றால்!

மூர்த்தி: (என்னது marriage ஆ?!) ஏங்க உங்க ஆளு வைடிங்ஆ marriageக்கு?!

கிருத்திகா: அய்யயோ , லவ்வர் ஆம் இல்லைங்க ,லவ் எனக்கு பிடிக்காதுங்க!!

மூர்த்தி :(அப்படா!!!, ஆளு இல்ல இப்போதைக்கு இது போதும்) ஏங்க ,அப்டி பொதுவா லவ் தப்புன்னு சொல்லிட முடியாதுங்க. நீங்க லவ்வில் விழற மாறி யாரையும் பார்க்கலன்னு சொல்லுங்க!

கிருத்திகா: சரிங்க , அப்பா கூப்பிடறார்!  ஏதாவது அப்டேட் என்றால் மெயில் பண்ணுங்க.

மூர்த்தி: சரிங்க, ஆனா நான் மெயில்ல அவ்ளோவ வர மாட்டேன். வேணா என் நம்பர்க்கு மெசேஜ் அனுப்புங்க
9800000021.
கிருத்திகா:offline
மூர்த்தி:ஹ்ம்ம் , offline போய்டுவாங்களே! என்னம்மா?இப்டி பண்றீங்களேமா!!

கம்பெனி கூப்டலையே என்ற கவலையை மறந்து வழக்கத்திற்கு மாறாக மூர்த்தி இன்று மிகவும் சந்தோசமாக இருந்தான். கிருத்திகாவிடம் பேசியது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

காலிங்,,,,

ஹலோ மூர்த்தி , டேய் எங்கடா ஆளையே காணாம் ! 3 மாசம் ஆச்சே மச்சி மறுமுனையில் கார்த்திக்!

எங்கடா கம்பெனி இன்னும் கூப்டல , கைல காசே இல்ல மச்சி. நீதான் கால் பண்றது.

பிசினஸ் பிஸிடா அதான்.

மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணுட்ட பேசினேன்டா! கிருத்திகாடா பேரு!

டேய் செம ,போட்டோ அனுப்பு மச்சி அப்புறம்.

மெயில்ல பேசினேன்டா, நயன்தாரா போட்டோதாண்டா இருந்துச்சு.

ஹ்ம்ம், எதுக்கும் முகம் ஒரு டைம் பார்த்துக்கோடா!

சரிடா சரிடா!!

மச்சி , சார்ஜ் இல்லடா இங்க பவர் கட். அடிக்கடி பவர் கட் ஆகுதுடா .அப்புறம் கூப்பிடுடா என்று சொன்னான் மூர்த்தி!

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்டா!! சரிடா , அப்புறம் கால் பண்றேன் என்று விடை பெற்றான் கார்த்திக்.

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#1

மச்சிசீஈஈஈஈஈஈஈ, ஒருவழியா நான் சாப்ட்வேர் கம்பெனில செலக்ட் ஆகிட்டேன்டா என்ற சந்தோசத்தோடு துள்ளிக் குதித்தான் மூர்த்தி. டேய் செமடா, எப்பிடிடா? கலகிட்ட போ ! இதுக்கு நீ ட்ரீட் கொடுத்தே ஆகனும் என்றான் கார்த்திக். இருவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார்கள். கார்த்திக் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு அவருடைய அப்பா பிசினஸ்க்கு உதவியா இருக்கிறான். படித்தற்கும் அவர்களின் பிசினஸ்க்கும் சம்பந்தம் இல்லை என்றாலும்,அதில் கார்த்திக்கு எந்த வித வருத்தமும் இருப்பதில்லை.அப்பாவைப் போல பிசினஸ்மேன் ஆக வர வேண்டும் என்பதுதான் கார்த்திக்கின் ஆசை. அப்பா சொன்னார் என்பதற்காகத்தான் இன்ஜினியரிங் படித்தான் அவன்.

கார்த்திக் பத்தி போதும் , மூர்த்தி பற்றி ஏதாவது சொல்லுங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி வாங்க மூர்த்தியைப்  பற்றி தெரிஞ்சுக்கலாம். மூர்த்தி அப்டியே கார்த்திக்கு நேர் எதிரானவன் , அப்பா விவசாயி ஆனால் இவனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல இருப்பான்.இவனுக்கு லைப் ஜாலியா வாழனும் அதுதான் இவன் லட்சியம்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சுட்டு , தனது சீனியர் சாப்ட்வேர்ல வேலை பார்க்கிறார் கார், பார்ட்டி ,டிஸ்கோ ,அடிக்கடி வெளிநாடு பயணம் என  ஜாலியா வாழ்கிறார் அதைப் போல நானும் வாழனும் என்று சொல்லியே சாப்ட்வேர் ஜாப்பிற்கு முயற்சி செய்து இப்பொழுது சென்னையில் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியிலும் செலக்ட் ஆகிவிட்டான்.

ஒரு மாதம் பயிற்சி , பயிற்சியின் பொழுதே சம்பளம் என (பிரபல உலகத் தர ஹோட்டல் மானேஜ்மெண்ட் விளம்பரம் போலத்தான்!!) , 8 மணி நேரம்தான் வேலை, வேலைக்குச் சென்று வர கேப் என பல வசிதிகள் சாப்ட்வேர் ஜாப்ல இருக்கும்டா! என சீனியர் சொன்னதை நினைத்து நினைத்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான் மூர்த்தி.

அவன் கனவு என்ன ஆனது?!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

சாதி பற்றி எழுதத் தொடங்கிய பொழுது , மனதில் கேள்விகள் ஆயிரம் எழுந்தது , தேடல் அதிகமானது ,அது சம்பந்தமாக படிக்கவும் தூண்டியது. இதுவரை எழுதியதைப்(பெரிதாக எழுதிவிட வில்லை என்றாலும்!!) படித்த பிறகு நண்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளை இந்த வாரம் விவாதிக்கலாம் என்று தோன்றியது. இதோ அந்தக் கேள்விகள்!

ஜாதியின் தொடக்கம் எவாள் ஆரம்பித்தார் எனத் தெரிந்தும் , மற்ற ஜாதியினரும் அதற்க்குக் காரணம் என்று கூறுவது சரியா ?

நல்ல கேள்வி. ஜாதியை யார் உருவாக்கினார்கள் என நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.

அப்படியே அவாள் உருவாக்கி இருந்தாலும் , அன்று அதனால் பாதிக்கப் பட்டு இன்று மேல் நிலையில் உள்ளோர் அன்று தங்களைப் போல இருந்தவர்களை இன்று பாரபட்சமாக நடத்துவது தொடர்வதால். இன்றைய சூழ் நிலையில் ஜாதிய பாடுபகு பார்ப்பதில் பலருக்குத் தொடர்பு உண்டு.

சிலர் உடனே இதற்க்குச்  சாட்சி உண்டா எனக் கேட்கலாம், அய்யா கொஞ்சம் நமது சமூகத்தைக் கவனியுங்கள் உங்களுக்கான பதில் அதிலே இருக்கிறது! இன்றைய சமூகமே அதற்குச் சாட்சி!

இதையும் படிக்க

வே.மதிமாறன் பதிவு

ஜாதியின் அடையாளம் இன்று  பிறப்பைச் சார்ந்து மட்டும்தான் இருக்கிறதா ?

ஜாதி எப்பொழுதோ , ஏதோ ஒரு காரணமாகக் கொண்டு வரப் பட்டு , அது ஒரு அடையாளமாக தொடரும் பொருட்டு, அனைவரும் விருப்பம் இல்லாமலே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப் பட்டுள்ளது. அதற்க்கு ஏற்றார் போல பல வலைகள் பின்னப் பட்டுள்ளது.

அன்று செய்யும் தொழில் வைத்துதான் இந்த அடையாளம் என்று சொல்லி இன்று வேறு எது ஏதோ காரணங்களுக்காகப் பின்பற்றப் படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஜாதியின் அடையாளம் பிறப்பைச் சார்ந்து இருப்பதைப் போல பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது பலரால் இங்கு  மாறாமல் கவனமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது.

இதையும் படிக்க:

ஊரானின் பதிவு

பணம் இருந்தால் ஜாதி மாறி விடுமா ?

பணம் ஜாதி என்ற வரையறைக்குள் வராதவாறு சிலரால் கவனமாக பார்த்துக் கொள்ளப் பட்டுள்ளது. பணத்திற்கு ஜாதி ,மதம், மொழி என்ற பாகுபாடு இல்லை . பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பது நம் பழமொழி!

ஒரு வேலை கீழ் ஜாதி என்று சொல்லப் படுபவர்கள் பணமே வைத்து இருந்தாலும் யார் பணம் வைத்துள்ளார்கள் என்றுதான் இந்தச்  சமூகம் பார்க்கும்!

பகுத்தறிவு மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியாதா?

முடியும். ஆனால் நம்மை பகுத்து அறியாதவாறு பலரால் பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது கல்வியால் ,வழிபாட்டு முறையால் , அரசியலால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. இன்று ஜாதி பார்ப்பவன் மெத்தப் படித்தவனாகவும் இருக்கிறான்.

இதையும் படிக்க:

பூசிக் கொள்ள இது சந்தனமல்ல

இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து ?

இட ஒதுக்கீடு சரி. ஆனால் அனைத்திற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் இல்லையா?
அம்பேத்கர் சட்டம் இயற்றும் பொழுது , “இடஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட சில சமூகங்கள் (கல்வி , தொழில் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள்)தங்கள் நிலையில் இருந்து மீண்டு வரும் வரை இருக்கும். கொஞ்ச காலங்கள் சென்ற பிறகு இதை மீள் பரிசீலனை செய்யலாம் என்று சொல்லி உள்ளார்” என்று சொல்வார்கள்!

ஆனால் இட ஒதுக்கீடு இன்று வரை இருக்கிறது, அந்த மக்கள் முன்னேறினார்களா?!
இன்றளவும் இட ஒதுக்கீடு தொடர அந்த மக்கள்தான் காரணமா ?
அவர்கள் ஏதோ இட ஒதுக்கீட்டின் பேரில் பலரின் செல்வங்களைக் கொள்ளை  அடித்ததைப் போல நினைப்பவர்கள், பல ஆண்டுகளாக (சுந்திர காலத்துக்கும் முன்பு இருந்தே) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைத் தடுத்து இன்று வரை உளவியல் ரீதியாக அவர்களை குறி வைத்தே சமூகத்தை நகர்த்தி வருவதை என்னவென்று சொல்ல , அதை எதில் கொண்டு போய்ச் சேர்க்க!

ஒரு வேளை அவர்கள் யாரேனும் ” இட ஒதுக்கீடு இல்லாமலே எங்கள் அடிப்படை உரிமைகளை ஏன் தடுத்தீர்கள் என்று கேட்டால்” உங்கள் பதில் என்ன?

இன்று தாழ்ந்த ஜாதி என்று  (சிலரால் கட்டாயமாக சொல்லப் பட்டவர்கள்)  ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் நால் வகை வர்ணங்களைத் தீர்மானித்து இருக்கக் கூடிய சூழ்நிலையை அன்று பெற்று இருந்திருந்தால்?!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வளரும் பட்சத்தில் கொண்டுவரப் படும் எதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஏனெனில் எல்லோரும் ஒன்றிணைந்ததுதான் சமுதாயம். ஆனால் ஏதோ ஒரு சிலர் உயர்வதும் , சிலர் தாழ்ந்து போவதும் ஜாதியால் என்றால்.  அது ஏற்றத் தாழ்வு ! அது சமதர்ம , சமுதாயம் அல்ல. அது எப்படி சரி என்று  ஆகும்?  ஆக எங்கோ தவறு உள்ளது,சிந்தியுங்கள்!!

                                                மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

முந்தைய பதிவிற்கு : சதி-சாதி-சா”தீ”!?!!#2

படங்கள்: கூகிள்
நன்றி:மதிமாறன் ப்ளாக்,ஊரான் ப்ளாக்,சுந்தர் காந்தி ப்ளாக்

சில கட்டுரைகள்

சாதி பற்றி எழுதத் தொடங்கியவுடன் ,அதைப் பற்றி  நிறைய படிக்க வேண்டும்.படித்த பிறகே எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவாக தி ஹிந்து தமிழ் நாளிதழ் மற்றும் சில ப்ளாக்கில் வெளியான பின்வரும்  கட்டுரைகளைப் படித்தேன்.

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்! -சமஸ் ப்ளாக்

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா? -சமஸ் ப்ளாக்

காதல், சாதி, கவுரவம் மற்றும் தண்டவாளம் -சந்திர மோகன், தி தமிழ் ஹிந்து நாளிதழ்

மாணவர்கள் சாதியின் பகடைக்காய்களா?-சந்திர சரவணன்,தி தமிழ் ஹிந்து நாளிதழ்

இவற்றில் இருந்து சாதியைப் பற்றி கொஞ்சம் புரிதல் கிடைத்தது.

அவர்களுக்கு என் நன்றிகள்! கூடவே நண்பர்கள் சிலரும் இது தொடர்பான தகவல்கள் தந்து உதவினார்கள். அனைவருக்கும் நன்றி!!

கல்வியும் ,ஜாதியும்

உலகமே வேற்று கிரகம் , அதில் குடியேற்றம் என எதைப் பற்றியோ சிந்திக்கும் பொழுதும் , எழுதும் பொழுதும் நாம் மட்டும் இந்த சாதியைப் பிடித்துக் கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அபத்தம். முதல் பதிவில் “கல்வி சாதியை மாற்றி விடுமா” என்று முடித்து இருந்தேன் , அதில் இருந்தே மேலும் தொடர்கிறேன்.

ஓரளவிற்கு ,ஏன் பள்ளி செல்லும் வரையிலும் நானும் கல்விதான் ஜாதிய பாகுபாட்டிற்கு மாற்று என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால் கல்லூரி சென்ற பிறகு அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று தெரிந்து கொண்டேன் .கல்வி சிந்திக்க வைப்பது உண்மைதான்.ஆனால் ஜாதியம் அந்த சிந்தனையைத் தாண்டிய ஒரு போதை நிலை என்பதை புறச் சூழல் விளக்கியது.

படி(பிடி)த்தவர்கள்

இன்று சமூக வலைதளிங்களில் முகநூல் , வாட்ஸ் அப் ,ட்விட்டர் எல்லாம் மிகப் பிரபலம். அதில் எத்தனை பேரு தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக தங்கள் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் படங்கள் வைத்து இருக்கிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.அவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது ? முன்னேற்றம் என்றா ? இவர்கள் படித்தவர்கள் அல்ல ஜாதியைப் பற்றாகப் பிடித்தவர்கள்!!

பார்ப்பனியம் மட்டுமா?

ஜாதி என்று சொல்லும் பொழுதெல்லாம் பார்ப்பனியமும் வந்து போகும் , இதைத் தவிர்த்து விட்டு ஜாதியைப் பற்றி பேசி விட முடியாது. சமஸ் அவர்களின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?” என்ற கட்டுரை படித்த பிறகுதான் தெரிந்தது. பார்ப்பனியம் தொடங்கி வைத்ததை இன்று மற்றவர்கள் அழிந்து விடாமல் காக்கிறார்கள் என்று.ஆக இன்றைய சூழலில் இங்கே பலருக்கும் இதில் பங்கு உண்டு!

இப்படியும் இருந்திருக்கலாம் !

ஜாதியின் தோற்றம் எப்பொழுது என்று தெரியவில்லை (ஆராய்வோம்!). ஆனால் அந்தக்  காலத்தில் ஒரு காலணி ஆதிக்க மனப் பான்மை இருந்தது. ஒவ்வொருவரும் தங்களைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டி இருந்தது .அதனால் ஜாதியை ஒரு கருவியாகக் கையாண்டு இருக்கலாம் .ஆனால் இன்றும் அது தேவையா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி?! சிந்திப்போம்!!

சமூகம்

சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் வந்த பிறகு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி.அதற்க்குள்  விரிசல் விழ வைப்பதுதான் இந்த ஜாதி உள்ளிட்ட பாகுபாடுகள்! பணப் புழக்கம் எந்த வித பேதமும் இன்றி  இங்கே எளிதாக நுழையும் சமுதாயத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக நடந்து கொள்ள ஜாதி மட்டும் தடையாக இருப்பது வேடிக்கை!


என்னே சாமர்த்தியம்?

இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று சொல்லிவிட்டு அவர்களின் பணத்தையோ , உழைப்பையோ உபயோகப் படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது? பணத்தில் ,உழைப்பில் ஜாதி இல்லையா?!

இங்கே என் நண்பர் சொன்ன ஒரு தகவலைச் சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.ஆம் இதோ அந்தத் தகவல் உங்களுக்கும்!

நடிகவேள் M R .ராதா அவர்களின் படத்தில் ஒரு காட்சி வரும். கீரை விற்பவரிடம் MR.ராதா மனைவி கீரையை வாங்கிக் கொண்டு நேராக வீட்டிற்குள் வந்து விடுவார்.அதைப் பார்க்கும் MR .ராதா , தண்ணி தெளித்து எடுத்துட்டுப் போடி தீட்டுப் பட்டுவிடும் என்று சொல்லுவார். அடுத்து சில நொடிகளில் யாரோ ஒருவர் வந்து அவர் மனைவியிடம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பார்கள் .அதை எடுத்துக் கொண்டு போகும் பொழுது அவர் மனைவி அதில் தண்ணீர் தெளிப்பார்கள் , உடனே M R .ராதா சொல்லுவார் “என்னடி பண்ற ? பணத்துக்கு ஏன்டி தண்ணீர் தெளிக்கற ?அதுக்கு தீட்டு என்று எதுவும் இல்லை” என்று !

இதைக் கேட்டதும் “அட பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்களே(அனைவரையும் அல்ல)!! உங்களின் சதிதான் இந்த சாதியா?!” என்று நினைக்கத் தோன்றியது.

விகடனின்  “வலைபாயுதே”வில் படித்தது என நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கவிதையைச் சொல்லி இந்த பதிவை இங்கே நிறைவு செய்கிறேன்!

இங்கே சாதிகள்ஒழியவில்லை!
ஒளிந்திருக்கின்றன!!

இதில் உங்களுக்கும் மறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்!

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!
படங்கள்:கூகிள்

நன்றி: விகடன், தி தமிழ் ஹிந்து, சமஸ் ப்ளாக்,வாட்ஸ் அப்,கூகிள் இமேஜ்

முந்தைய பதிவிற்கு!

சதி-சாதி-சா”தீ”!?!!#1

சதி-சாதி-சா”தீ”

ஜாதி எப்படி வந்திருக்கும்:

ஜாதி இது இல்லாமல் இந்தியாவில் எதுவும் இல்லை என்ற நிலை! என்றோ , யாரோ ஒரு சிலரால் ஒரு சில நோக்கத்தால் உருவாக்கப் பட்டு , காலம் காலமாக வளர்த்தெடுக்கப் படுகிறது ! அனைவரும் தங்களை ஆண்டவர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்! ஜாதிய அடிப்படையிலான பிரச்சனைகள், கவுரவக் கொலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. எல்லோருக்கும் இருக்கும் சர்க்கரை நோய் போல ஜாதி என்பது ஒரு வித மன நோயாக இருக்க வேண்டும்!

ஜாதி என்றால் என்ன ?

இதோ விக்கிபிடியா தரும் விளக்கம்:

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது.

கேள்விகள்:

ஒரு மனிதனின் அடிப்படை என்பது உண்ண உணவு , உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமே ஜாதி அல்ல!

வேலைப் பிரிவினைதான் ஜாதி உருவாக காரணம் என்றால் , இவ்வளவு காலமாக வேலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன! ஜாதி மட்டும் ஏன் அடிப்படையில் அப்படியே உள்ளது?

ஜாதியை ஏன் பாதுகாக்க வேண்டும்?

இப்பொழுது கூட ஜாதி பார்க்கப் படுகிறதா?

இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்? என்று பரவலாக பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது தொடக்கத்திலோ அல்லது சந்திப்பு முடியும் பொழுதோ என்ன  ஜாதி என்ற கேள்வி கேட்கப் படாமல் இருப்பதில்லை. நீ என்ன ஜாதி என்று கேட்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை.ஒரு வகையில் அதுவும் ஒருவித போதை ! அது டாஸ்க்மாக் போதையை விட கொடியது.ஆம் டாஸ்மாக் போதையாவது குடுபத்தை அழிக்கும்.ஜாதிய போதையோ சமுதாயத்தை ஏன் இனத்தையே அழித்துவிடும்!

கல்வியும் , ஜாதியும்:

இன்றைய கல்வி என்பது அன்றைய கல்வியின் சிறு மாற்றம்தான். பல கல்விக் கூடங்களும் ,கல்வி கற்றுத் தருபவர்களில் சிலரும் இங்கே ஜாதிய அடையாளத்தோடு இருக்கும் பொழுது , கல்வி மட்டும் எப்படி சாதியப் பாகுபாட்டை மாற்றி விடப் போகிறது?

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

நன்றி: விக்கிபீடியா மற்றும் கூகிள்