Archive for the ‘நான் வியந்த மனிதர்கள்’ Category

நான் வியந்த மனிதர்கள்

நேற்று எனது மொபைல்ல இணையச் சேவை ஒழுங்காக எடுக்க வில்லை. இரவு 11 மணி இருக்கும், வாடிக்கையாளர் சேவையிடம் முறையிடலாம் என்று அழைத்தேன், மறுமுனையில்  அந்தோனி என்பவர் (சாந்தோம் airtel வாடிக்கையாளர் சேவை மையம்)அழைப்பை ஏற்றார்.பாட்சா படத்தில் வரும் அந்தோனி போல இல்லை அவர்! மிகவும் மரியாதையாகவும் , படபடப்பு எதுவும் இல்லாமலும், தெளிவாகவும் பேசினார்.

பெரும்பாலும்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் ஒரு வித அவரச கதியில் பேசுவார்கள்( நான் கேட்டவரை) .ஆனால் இவர் முற்றிலும் மாறுபட்டவர் மட்டும் இல்லாமல் மிகவும் பொறுமையுடனும் , பொறுப்புடனும் நடந்து கொண்ட விதம் வியப்பளித்தது.

இவ்வளவு பொறுமையாகவும் , தெளிவாகவும் பேசுகிறீர்களே பாராட்டுக்கள் என்றேன். “நீங்கள் எதற்காக அழைத்தீர்களோ அதற்க்கான விவரம் முழுமையாக உங்களுக்குச் சென்று சேர வேண்டும், அழைப்பை முடித்த பிறகு உங்களுக்கு குழப்பமோ , மீண்டும் அதைப் பற்றிய தகவல்களோ தேவைப்படதவாறு  முதல் முறையே அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பதில் அளித்து ஆச்சர்யப் பட வைத்தார்!!”

இதைக் கேட்டு உங்களுக்கும் ஆச்சர்யமாக இருக்கிறதா?!