முன்பெல்லாம் அஜீத் பேசினால்தான் பரபரப்பு , ஆனால் இப்பொழுது அஜீத் எதைச் செய்தாலும் அது பரபரப்பாகிவிடுகிறது!
தன் வீட்டு வேலையாட்களுக்கு வீடு கட்டித் தந்தார், விமானத்தில் செல்லும் பொழுது விவேக்கிற்கு கைக் கடிகாரம் பரிசளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் , பட ஷூட்டிங்கில் பிரியாணி செய்து எல்லோருக்கும் பரிமாறினார் எனப் பல செய்திகள் கடந்த பல மாதங்களில் வந்து போயின!
இன்று அஜீத், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அப்புக் குட்டியை வைத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்! என்ற செய்தி facebook , twitter , நியூஸ் பேப்பர் எங்கும் பரபரத்த செய்தி !அதோடு மட்டும் இல்லாமல் அப்புக்குட்டியிடம் ,உங்கள் சொந்தப் பெயரையே வைக்கலாமே என பரிந்துரையும் செய்து இருக்கிறார்!
முன்னதாக அஜீத் அப்புக்குட்டியிடம் நீங்கள் ஏன் ஒரே மாதிரி கேரக்டர்ல நடிக்கறீங்க ! வித்தாயசமான கேரக்டர்ல நடிக்கலாமே என்று கேட்டு இருக்கிறார் , அதற்க்கு அவர் இது போதும் அண்ணே என்று சொல்லி இருக்கிறார் ! அதற்க்கு அஜீத் , நானே உங்களை வைத்து நேரம் கிடைக்கும் பொழுது போட்டோஷூட் எடுக்கறேன் என்று சொன்னதோடு இல்லாமல் நேற்று அதனை செய்தும் காட்டி இருக்கிறார்! அதற்காகவே ஒப்பனைக் கலைஞர்களை வர வைத்து , ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்து இந்த போட்டோஷூட்டை முடித்து இருக்கிறார் ! இதைப் பற்றி அப்புக் குட்டி கூறும் பொழுது ,
அஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம் என்று அப்புக்குட்டி கண்ணீர் மல்க கூறி உள்ளார் !
இது இப்படி இருக்க அஜீத் குறும்படம் இயக்கப் போகிறார் என்ற வதந்தி கூட பரவியது!
சமீபத்தில் நடிகரும் , எழுத்தாளருமான சோ அவர்கள் அஜீத்தைப் பற்றி இவ்வாறு கூறி இருந்தார் ” எம்.ஜி.ஆர் போல சக கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை தனது உதவியால் , செயல்பாட்டால் வசீகரிக்க கூடியவர் அஜீத் என்று சொல்லி இருந்தார் !
அஜீத் கஷ்டப் பட்டே இன்று உச்ச நட்சத்திரம் ஆகி உள்ளார். அதனால்தான் என்னமோ தான் வந்த நிலைமையை இன்னும் மறக்காமல் இருக்கிறார் . தன்னம்பிக்கை உள்ளவர் அஜீத் என்பதைத் தாண்டி எல்லோரிடமும் மரியாதையாகவும் , பண்புடனும் பழகுகிறார் ! தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தது, முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வது , செய்தாலும் பெரும்பாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதது ,ரசிகர்களின் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் அவர் தனது ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்கள் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்!
நன்றி:முதல் படம் விகடனுக்குச் சொந்தமானது, நன்றி விகடன்!!இரண்டாவது படம் வாட்ஸ் அப்ல நண்பர் அனுப்பியது!