Archive for June, 2015

முன்பெல்லாம் அஜீத் பேசினால்தான் பரபரப்பு , ஆனால் இப்பொழுது அஜீத் எதைச் செய்தாலும் அது பரபரப்பாகிவிடுகிறது!

தன் வீட்டு வேலையாட்களுக்கு வீடு கட்டித் தந்தார், விமானத்தில் செல்லும் பொழுது விவேக்கிற்கு கைக் கடிகாரம் பரிசளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் , பட ஷூட்டிங்கில் பிரியாணி செய்து எல்லோருக்கும் பரிமாறினார் எனப்  பல செய்திகள் கடந்த பல மாதங்களில் வந்து போயின!

இன்று அஜீத், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அப்புக் குட்டியை வைத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்!   என்ற செய்தி facebook , twitter , நியூஸ் பேப்பர் எங்கும் பரபரத்த செய்தி !அதோடு மட்டும் இல்லாமல் அப்புக்குட்டியிடம் ,உங்கள் சொந்தப் பெயரையே வைக்கலாமே என பரிந்துரையும் செய்து இருக்கிறார்!

முன்னதாக அஜீத் அப்புக்குட்டியிடம் நீங்கள் ஏன் ஒரே மாதிரி கேரக்டர்ல நடிக்கறீங்க ! வித்தாயசமான கேரக்டர்ல நடிக்கலாமே என்று கேட்டு இருக்கிறார் , அதற்க்கு அவர் இது போதும் அண்ணே  என்று சொல்லி இருக்கிறார் ! அதற்க்கு அஜீத் , நானே உங்களை வைத்து நேரம் கிடைக்கும் பொழுது போட்டோஷூட் எடுக்கறேன் என்று சொன்னதோடு இல்லாமல் நேற்று அதனை  செய்தும் காட்டி இருக்கிறார்! அதற்காகவே ஒப்பனைக் கலைஞர்களை வர வைத்து , ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்து இந்த போட்டோஷூட்டை முடித்து இருக்கிறார் ! இதைப் பற்றி அப்புக் குட்டி கூறும் பொழுது ,

அஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம் என்று அப்புக்குட்டி கண்ணீர் மல்க கூறி உள்ளார் !

இது இப்படி இருக்க அஜீத் குறும்படம் இயக்கப் போகிறார் என்ற வதந்தி கூட பரவியது!

சமீபத்தில் நடிகரும் , எழுத்தாளருமான சோ அவர்கள் அஜீத்தைப் பற்றி இவ்வாறு கூறி இருந்தார் ” எம்.ஜி.ஆர் போல சக கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை தனது உதவியால் , செயல்பாட்டால் வசீகரிக்க கூடியவர்  அஜீத் என்று  சொல்லி இருந்தார் !

அஜீத் கஷ்டப் பட்டே இன்று  உச்ச நட்சத்திரம் ஆகி உள்ளார். அதனால்தான் என்னமோ தான் வந்த நிலைமையை இன்னும்  மறக்காமல் இருக்கிறார் . தன்னம்பிக்கை உள்ளவர் அஜீத் என்பதைத் தாண்டி எல்லோரிடமும் மரியாதையாகவும் , பண்புடனும் பழகுகிறார் ! தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தது, முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வது , செய்தாலும் பெரும்பாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதது ,ரசிகர்களின் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் அவர் தனது ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்கள் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்!

நன்றி:முதல் படம் விகடனுக்குச் சொந்தமானது, நன்றி விகடன்!!இரண்டாவது படம் வாட்ஸ் அப்ல நண்பர் அனுப்பியது!

பிளாஸ்டிக் !

பிளாஸ்டிக்! பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு என்பதில் தொடங்கி இன்று அதன் பயன்பாடு பெரும்  பிரச்னை என்ற நிலையில் இருக்கிறது. காலையில் பல் துலக்கும் பசை வைத்திருக்கும் அடைப்பான் முதல் இரவு படுக்கும் பாய் வரை அனைத்தும் பிளாஸ்டிக்!

புலி பசித்தால் எப்படி புல் திங்காதோ அப்படித்தான் நினைத்து இருந்தோம் பசு பசித்தாலும் பிளாஸ்டிக் சாப்பிடாது என்று நேற்று வரை! இன்றோ பிளாஸ்டிக் என்பது மாடுகளுக்கு பீட்சா , பர்கர் போலாகிவிட்டது! சில மாடுகள் அதை சாப்பிடுவதால் இறந்தே விடுகின்றன !

மாடுதான் என்றில்லை , நீர் வாழ் உயிரனங்களும் இருந்து விடுகின்றன. நம்முடைய சுயநல போக்கினால் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் நீர் நிலைகளில் சென்று அதனை மாசு செய்வதோடு மட்டுமல்லாம் அதில் வாழும் உயிரனத்தின் வாழ்வையும் அழித்து விடுகின்றன! இது பிளாஸ்டிக் ஆறா என்று சொல்லுமளவு இருக்கும் நதிகளில் கூட பிளாஸ்டிக் பரவி உள்ளது.

தகவல்: விக்கிபீடியா
அறிமுகம்:
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். “வார்க்கத் தக்க ஒரு பொருள்” என்னும் பொருள் தரும் “பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.

நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க முடியாத நேரத்தில் 20 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை எனவே இவை ‘சூழல் நண்பன்’ என விளம்பரப்படுத்தப் படுகின்றன.

நெகிழிப்பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.

குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்ட வேண்டும்.

அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப் படுத்தவும் , கண்காணிக்கவும் செய்ய வேண்டும்.

மாற்று:
நெகிழிக்குப் பதிலியாக தூய மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து உருவாகும் சிலிக்கான் சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை ரப்பர் போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வ்ணிக ரீதியில் இலாபமில்லாததால் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பண்டைய காலங்களில் நமது வாழ்க்கை இயற்க்கை முறையை ஒட்டி இருந்தது , உலகிற்கே இயற்கைப் பயன்பாட்டை கற்றுக் கொடுத்த நாடு நாம் !ஆனால் இன்றோ நாம் அறிவியலின் அறிவு என்ற பெயரில் அழிக்கும் பொருள்களை பயன்படுத்துதலில் உலகோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்!கண்டுபிடிப்புகள் எல்லாமே மக்களின் நன்மைக்குத் தானே?! தீமை செய்ய அல்லவே!!

மக்களும் அரசும் சேர்ந்த முயற்சியே எதிலும்  வெற்றி பெறும். ஆகையால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக , அதன் தயாரிப்புக் எதிராக மக்கள் , அரசு சேர்ந்த புரட்சி உருவாக வேண்டும் , அது வெறும் கோஷமாக மட்டும் இருந்துவிடக் கூடாது!

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பயணிக்க தயார் நிலையில் உள்ள ரயில்| படம்: ம.பிரபு.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் – ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் – அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் – வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் – அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் – சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் – கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

ரயில்கள் எத்தனை ?

*தினசரி கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 95 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே 97 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

நன்றி: தி ஹிந்து தமிழ்

Lioness saves its cub from floods in Gujarat

நம்ம சின்ராசுங்க !!

நம்ம சின்ராசுங்க !!

ஹெல்மட் கட்டாயம்!

ஹெல்மட் கட்டாயம்!

வழக்கு எண் 000

வழக்கு எண் 000

Thanks: Whats up, Wiki

A meme (/ˈmiːm/ meem) is “an idea, behavior, or style that spreads from person to person within a culture”.

இறைச்சி விலை

திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு விலை எனவும் , ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு விலை எனவும் சிக்கன் , மட்டன் , மீன் போன்ற இறைச்சிகளுக்கு நிர்ணயம் செய்யப் படுகிறது. இதற்குப் பின்னால் பலர் சேர்ந்த ஒரு சங்கம் இருக்கிறது போல. இதைத் தட்டிக் கேட்டால் வாங்கினால் வாங்குங்கள் என்றுதான் பெரும்பாலும் சொல்கிறார்கள். இதைப் பார்த்தால் பண்டிகைக் கால ஆம்னி பஸ் டிக்கெட் விலை ஏற்றம் நியாபகத்திற்கு வருகிறது.

111111111

காய்கறி விலை

மாமிச உணவுகளுக்குத்தான் இப்படி என்றால் , காய்கறிகளுக்கும் அப்படித்தான் இருக்கிறது. சனி , ஞாயிறு வருகிறது என்று முன்னரே ஒருவித காய்கறித் தட்டுப் பாட்டை பலர் சேர்ந்து உருவாக்குகிறார்கள். இதனை மொத்தமாக வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து வாங்கும் சிறு வியாபாரிகள் உறுதி செய்கிறார்கள்! தேவைப் பட்டால் நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் மார்க்கெட் சென்று விசாரித்துப் பாருங்கள் .உங்களுக்கு உண்மை புலப்படும் .

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்
இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?! இதற்க்கு எல்லாம் ஒரு விலை நிர்ணயம் வர வேண்டும் , அது தொடர்ந்து கண்காணிக்கப் பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

ஒரு நான்கு வழிச் சாலை சிக்னல், நாலாபுறம் வண்டி வந்து செல்லும்படியான அகலமான சாலைதான் அது. வழக்கமாக ஒரே சமயத்தில் இருபுறங்கள் வாகனங்கள் செல்ல அனுமதிப்பார்கள், மற்ற இருபுறங்களில் இருப்பவர்கள் காத்திருப்பார்கள். இது தெரிந்ததுதான் இதில் என்ன சொல்ல முயற்சி செய்கிறாய் என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன் இதிலேயும் பிரச்சனை இருக்கிறது.

ஓர் இரு வழியில் (ஒரு முனையில்)செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டு , அடுத்த இருவழியில் (மறுமுனையில்)செல்பவர்களுக்கு அனுமதி வழங்கும் பொழுது , இதற்க்கு முன்னால் செல்ல அனுமதிக்கப் பட்டவர்களில்(ஒருமுனையில்)  கடைசியாக சில பேர் செல்லக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட, வேகமாக வருபவர்கள் வேகத்தை உடனடியாக குறைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

அதே வேளையில் மறுமுனையில் சிக்னல் கொடுக்கப் பட்டு இப்பொழுதுதான் பயணத்தை துவங்க இருப்பவர்கள் கொஞ்ச நேரம் நின்று , கடைசியாக செல்பவர்களுக்கு வழிவிட்டுச் செல்லலாம். இதனால் விபத்து ஏற்ப்படுவது தவிர்க்கப் படும்.

அதே நேரம் , ஒருமுனையில்  செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டவுடன் , அவர்கள் நின்றுவிட வேண்டும். அதை விட்டு விட்டு , மறுமுனையில் கடைசி வரை செல்ல அனுமதிக்கிறார்கள்  என்பதால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது.

அந்த சிக்னல் என்ன இந்தியா -பாகிஸ்தான் எல்லையா என்ன ?  எதிர் இருப்பவரை ஒரு எதிராளிபோலப் பார்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொள்ள?பாதுகாப்பான பயணத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டாமா ? அது நமது கடமை மட்டும் அல்ல பொறுப்பும் கூட!!

நேற்று வழக்கம் போல வண்டியில் ஆபீஸ் போய்க்கொண்டு இருந்தேன். வண்டி வேல் டெக் கல்லூரி அருகே செல்லும் பொழுது  எதிர்பாராத விதமாக அது நடந்து விட்டது. ஆமாம் யாரோ வண்டியை பின்னாடி இழுப்பது போலவும் , வண்டி மேற்கொண்டு செல்ல தயங்குவது போலவும் தோன்றியது. என்ன ஆச்சு என்று உடனே ஓரமாக நிறுத்திப் பார்த்தால்!! புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்,,ஜுராசிக் பார்க் படத்தில் வரும் சத்தம் கேட்டது,!பிறகுதான் தெரிந்தது சத்தத்திற்க்கான காரணம்! டயர் பஞ்சர்!! பெட்ரோல் இல்லாமல் நின்று இறந்தால் கூட வேற வண்டியோடு தொத்திக் கொண்டு சிறிது தூரம் செல்லலாம் ஆனால் பஞ்சர் என்றால் ?! கஷ்டம்தான்! என்ன செய்வது என்று தெரியாமல் அக்கம் பக்கம் பார்த்தேன் , எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள் .அங்கே தாகத்துக்கு பஞ்சர் போட ஜூஸ் கடை மட்டும்தான் இருந்தது, கொஞ்சம் தூரம் பார்த்தால் அங்கே வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் டாஸ்மாக் மட்டுமே இருந்தது. சரி நம் நேரம் என நொந்து கொண்டு , சிறிது தூரம் வரை தள்ளிக் கொண்டுசென்றேன். என்னிடம் எந்த டூ வீலர் பஞ்சர் ஒட்டும் ஆட்களின் மொபைல் நம்பர் இல்லை. சிறிது தூரம் தள்ளியதும் ஓர் இடத்தில் பஞ்சர் ஒட்டணுமா தொடர்பு கொள்க என நம்பர் ஒன்று எழுதப் பட்டு இருந்தது. இப்பத்தான் காலையிலும் எரியும் ஸ்ட்ரீட் லைட் போல முகம் பளிச்சென மின்னியது. நல்ல வேலை மொபைல்ல சார்ஜ் இருந்தது ,அப்படா என பெருமூச்சு விட்டு அந்த நம்பர்க்கு அழைத்தால் “அங்க வர இப்ப ஆட்கள் இல்லை சார்” என்று சொல்லிவிட்டான்! இப்பொழுது திடீரென பவர் கட் ஆனது போல ஆகிவிட்டது முகம்! என்ன செய்வது ?என்னிடம் வேறு நம்பர் இல்லை !நொந்து கொண்டு ஒரு 15 நிமிடம் தள்ளிக் கொண்டு கீழ்கட்டளை-கோவிலம்பாக்கம்-வேளச்சேரி-கிரோம்பேட் 4 வழிச் சந்திப்பில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் கடையப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்! காத்திருந்து காதலி கிடைத்ததைப் போல அவ்வளவு மகிழ்ச்சி! ஒரு வழியாக பஞ்சர் ஒட்டி முடித்தாயிற்று. அதோடு நில்லாமல் , அந்த டூ வீலர் மெக்கானிக்கலிடம்  இதே வழித்தடத்தில் பஞ்சர் ஆனால் கூப்பிட்டால் வந்து ஒட்டித் தருவீர்களா என்று கேட்டேன் . தருவோம் சார் , ஆனால் டபுள் சார்ஜ் என்றார். பஞ்சர் ஒட்ட 70 ரூபாய் , இந்த மாதிரி இடையில் வந்து வழித்தடத்தில் பஞ்சர் ஒட்டினால் எக்ஸ்ட்ரா 80 ரூபாய் . ஆட்டோ மீட்டரை விட அவர் ஒண்ணும் அதிகம் கேட்கவில்லை எனத் தெரிந்தது!! அவர் மொபைல் நம்பரைக் குறித்துக் கொண்டேன்! இதன் மூலம் நம் மொபைலில் இந்த மாதிரி டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்களின் நம்பர் சில இருப்பது அவசியம் எனத் தெரிந்து கொண்டேன் .அதோடு இல்லாமல் நாம் வழக்கமாக செல்லும் சாலையில் எங்கு எங்கு பெட்ரோல் பங்க் இருக்கு , டூ வீலர் பஞ்சர் கடை எங்கு இருக்கு என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ பன்றோம்! இதைப் பண்ண மாட்டோமா ?! வேல் டெக்  காலேஜ் முதல் கீழ்கட்டளை போற சிக்னல் அல்லது காமாட்சி ஹாஸ்பிட்டல் போற வழி வரை ஒரு வேளை உங்கள் வண்டி பஞ்சர் ஆனால் இவர்களைத் தொடர்பு கொள்ளவும் , 9566156262 9677245997-விஷ்ணு டூ வீலர்

நான் வியந்த மனிதர்கள்

நேற்று எனது மொபைல்ல இணையச் சேவை ஒழுங்காக எடுக்க வில்லை. இரவு 11 மணி இருக்கும், வாடிக்கையாளர் சேவையிடம் முறையிடலாம் என்று அழைத்தேன், மறுமுனையில்  அந்தோனி என்பவர் (சாந்தோம் airtel வாடிக்கையாளர் சேவை மையம்)அழைப்பை ஏற்றார்.பாட்சா படத்தில் வரும் அந்தோனி போல இல்லை அவர்! மிகவும் மரியாதையாகவும் , படபடப்பு எதுவும் இல்லாமலும், தெளிவாகவும் பேசினார்.

பெரும்பாலும்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் ஒரு வித அவரச கதியில் பேசுவார்கள்( நான் கேட்டவரை) .ஆனால் இவர் முற்றிலும் மாறுபட்டவர் மட்டும் இல்லாமல் மிகவும் பொறுமையுடனும் , பொறுப்புடனும் நடந்து கொண்ட விதம் வியப்பளித்தது.

இவ்வளவு பொறுமையாகவும் , தெளிவாகவும் பேசுகிறீர்களே பாராட்டுக்கள் என்றேன். “நீங்கள் எதற்காக அழைத்தீர்களோ அதற்க்கான விவரம் முழுமையாக உங்களுக்குச் சென்று சேர வேண்டும், அழைப்பை முடித்த பிறகு உங்களுக்கு குழப்பமோ , மீண்டும் அதைப் பற்றிய தகவல்களோ தேவைப்படதவாறு  முதல் முறையே அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பதில் அளித்து ஆச்சர்யப் பட வைத்தார்!!”

இதைக் கேட்டு உங்களுக்கும் ஆச்சர்யமாக இருக்கிறதா?!

யாதுமாகி நின்றேன் -இது விமர்சனம் அல்ல வியப்பு!!

இப்பொழுது நண்பன் கவி இளவல் தமிழ் (அரவிந்த்) அவர்களின் யாதுமாகி புத்தகம் படிக்கத் துவங்கி உள்ளேன். இது ஒரு கவிதைப் புத்தகம். அவரின் கவிதையைப் படிக்கும் பொழுதே சிறுவயதில் பரிசாகக் கிடைத்த  பாரதியாரின் கவிதை புத்தகத்தை வாசித்ததைப் போல ஒரு உணர்வு எழுந்தது.

எண்ணத்தில் மட்டும் அல்ல , எழுத்திலும் தமிழுக்கு ஏதோ சொல்ல முனைந்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்! அதனை  முதல் புத்தகத்திலே சாதித்து இருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

கவிதை நிறைய தமிழ் வழிகிறது, அதனால் இது புரியவில்லை என்று சிலர் சொல்லலாம்! அவர்களுக்கு ஒரு சில கேள்விகள்

ஒரு சிறந்த புத்தகம் படித்து முடித்த பிறகு நம்மை சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் எதையாவது கற்றுக் கொண்டோம் என்ற எண்ணம் எழ வைக்க வேண்டும் அந்த வகையில் இந்தப் புத்தகம் இரண்டையும் செய்திருப்பதாகவே உணருகிறேன். புரியவில்லை என்பது நாம் இன்னும் நன்றாக கற்க வில்லை அல்லது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். கவிதைகளுடன் சேர்த்து அதற்க்கு ஏற்றாப்போல ஓவியங்களும் சேர்த்து இருக்கலாம், இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்!

வலி பொறுத்தவள்  என்று வாழ்த்துப் பாடலில் தொடங்கி அடிமைகள் அல்லோம்,தெருவோரத் தேவதை,என் வீட்டுக் கடவுள் என பல தலைப்புகளில்  நீண்டு கொண்டே போகிறது இவரது கவிதை!

அவர் கவிதைகளில் நான் ரசித்த சில வரிகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன்!

இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ?- வலி பொறுத்தவள்
விண்வேந்தன் -பைந்தமிழ் தேர்ப்பாகன்
சாமிகளும், மதங்களுமே வாயில்வரை என்போம்-அடிமைகள் அல்லோம்
ஓயாம நான் அழுதும் இன்னும் ஒரு தாயும் பிறக்கலையே -தெருவோரத் தேவதை

இப்படி நெறைய சொல்லிக் கொண்டே போகலாம்! மொத்தத்தில் இந்தப் புத்தகம் “இளைஞர்களுக்குத்” தமிழ் ஆர்வம் குறையவில்லை என்பதற்க்குச் சான்றாக நிற்கிறது!

yathumagi

yathumagi