Archive for the ‘சென்னை செய்திகள்’ Category

Vanakkam! NewTamilStudies-“TheStateOfMedia In TN” on Mar19, from 5.30pm to 8pm with Sr.Jn.BabuJaykumr at Panuval Book Store, Thiruvanmiyur. All are invited!

Hi Everyone. Good Evening. Hope you all haven’t planned your weekend yet? This is it. We’ve it for you. So why to just read this post? You can refer your friends, share and spread the word. We want you to Just Volunteer!

Join Just Volunteer Facebook Group – http://bit.ly/20wDqAG

#########################

1) Lake Cleanup by Environmentalist Foundation of India. Volunteer for India & her Environment With EFI. Saturday: 7 a.m. to 10 a.m. (12th March): Tiruneermalai & Adambakkam Lake Clean Ups. POC – 9677097824

2) Speech Workshop by Thozhan, a Social Reforming Group. Topic – The Power of Consumer – World Consumer Rights Day 2016. Date & Time: 12/03/2016, Saturday, Morning 7.15 AM till 8.30 AM. Venue: Sivan Park, K.K.Nagar, Chennai-78. POC: 9962612555 / 8678919433

3) We invite you to the Release of the Citizen Model Bill on Lokayuktha drafted by Arappor Iyakkam with public participation on March 12th at 11 a.m. Place: T.N.Rajarathinam Kalai Arangam (Opp. MGR Janaki College, at the end of Thiru.Vi.Ka bridge, Adyar) POC – 9677066853

4)  Lake Cleanup by Environmentalist Foundation of India. Volunteer for India & her Environment With EFI. Sunday: 7 a.m. to 10 a.m. (13th March): Sithalapakkam Lake Clean Up: 9677097824.

5) Free the Tree Campaign by Nizhal on March 13th starting at 9 a.m. Meeting Point is Kottur Bus Stop, Gandhi Mandapam Road. Landmark is Anna Centenary Library. POC – 8508799229

6) Beach Cleanup by Angels of Marina on March 13th at 6.30 a.m. Venue: Behind Light House, Marina Beach. POC – Rajesh – 9042812057

7) Traffic Awareness Campaign by Thozhan at Retteri Signal on March 13th starting at 4 p.m. in the evening. POC – 9500021994

8) Arivin Aruvi by Nallore Vattam on March 13th starting at 4 p.m. on March 13th. Venue – Manickka Maanavar Paadasalai, No.23, Gangai Amman Koil Street, Vadapalani, Chennai. Topic – Thiyagathin Valimai. POC – 9962189079

9) Weekend Shramdaan by Nizhal, Friends of Trees on March 13th between 4.30 p.m. and 5.30 p.m. Venue – Kotturpuram Tree Park, River View Road, Kotturpuram, Chennai. POC – 9840604912

#########################

Happy Volunteering and Happy Weekend as well.

#JustVolunteer ! 😋

Come, Free the TREES!

Free the Tree Campaign by Nizhal tomorrow morning, March 13th, starting at 9 a.m. in the morning. Meeting Point – Kottur Bus Stop, Gandhi Mandapam Road. POC – 8508799229

All Are Welcome.

#JustVolunteer ! 😋

===============================
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூல் வெளியீடு !
பிப்ரவரி 28 அன்று சென்னையில் நடக்கிறது!
===============================
தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், பிப்ரவரி 28 (28.02.2016) அன்று, சென்னையில் நடைபெறுகின்றது.

28.02.2016 அன்று மாலை 5.30 மணியளவில், சென்னை கே.கே. நகர் அண்ணா சாலையிலுள்ள சாலை மகா மகால் அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை ஏற்கிறார். திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொள்கிறார்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராஜ், இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் சிறப்புப் படி பெறுகின்றனர்.

தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார் ஆகியோர் நூல் திறனாய்வுரையாற்றுகின்றனர்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நிகழ்வை நெறிப்படுத்துகிறார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி நவில்கிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

====================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
====================

Source: Whatsapp

 

Chennai NEXT அங்கீகரிக்க,அலச,அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்!

சென்னை நெக்ஸ்ட் என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தன்னார்வலர்கள் சார்ந்த குழுக்கள் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வு இன்று(ஜனவரி 10)குருநானக் கல்லூரி  வேளச்சேரியில் நடந்தது.  சென்னை பெருமழையில் தொண்டுள்ளம் புரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது.

அதில் ஒரு நிகழ்வாக சென்னை நெக்ஸ்ட் நடந்தது. தோழன் அமைப்பு , சட்டப் பஞ்சாயத்து அமைப்பு, லோக்சத்தா கட்சி போன்றவை சேர்ந்து நடத்திய நிகழ்வாய் இது இருந்தாலும் , மற்ற அமைப்பின் உறுப்பினர்களையும் , மற்ற அமைப்பையும் , தனி தன்னார்வலர்களையும் அங்கீகரிக்கத் தவறவில்லை என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையும் இந்த 3 அமைப்புகளுக்கும் ஒரு  சபாஷ்!

இந்த நிகழ்வில் பங்கேற்கக் காரணமாய் இருந்தது அதன் எளிமை. மிகப் பெரிய விளம்பரமாய் இல்லாமல் இயல்பாய் இருந்தது. இதில் பங்கேற்ற விருந்தினர்களும் எளிமையாய் இருந்தார்கள், உடையில் மட்டும் அல்ல நடந்து கொண்ட விதத்திலும். மற்ற விழா போல VIP க்கள் , கலந்து கொண்டவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றுதான் , எல்லோரும் VIP தான் என்பது போல அவ்வளவு எளிமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை வரிசை அமைந்து இருந்தது சிறப்பாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என சொல்லப் பட்டது,
1. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை அங்கீகரிப்பது.
விழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட  தன்னார்வலர்களை, குழுக்களை அங்கீகரித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள்!!

2. இதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்வது? இது போல நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என அலசி அதற்கான செயல் திட்டம் வகுப்பது.
விழாவில் சில செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டது அதன் தொடர்ச்சியாக அடுத்து சில கூட்டங்கள் நடக்க இருப்பதாய்க் கூறினார்கள்.

விவாதிக்கப் பட்ட பல விசியங்களில் சில,
1.வெள்ள நிவாரண பணி கணக்கெடுப்பை நியாமாக நடத்த கண்காணிப்பது, உதவி செய்வது.
2.சென்னையின் அந்த அந்த வார்டுகளை அந்த அந்த மக்களே சிறு குழுக்களாக நிர்வகிப்பது.
3.குப்பை மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம்,மழை நீர் சேகரிப்பு மையங்கள் பற்றிய விழிப்புணர்வு , செயல்திட்டம்.
4.வாக்காளர் பெயர் சேர்த்தல், ஓட்டளிப்பதை உறுதி படுத்துதல்  மற்றும் விழிப்புணர்வு.
5.லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு/லஞ்சமில்லா சேவைக்கு உதவி.

விழா விருந்தினர்களில்
டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் அவர்கள் முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி
(மற்றும்)
திரு. இளங்கோ ரங்கசாமி அவர்கள் விஞ்ஞானி,குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர்

இவ்விருவரின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் , இளங்கோ அவர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி விரைவில் அனைவரையும் சென்றடைந்துவிடும் ஆனால் மாற்றம் என்பது நிகழ கொஞ்சம் காலம் தேவைப்படும் ஆனால் நம்மால் முடியும் என்று ஊக்கம் தரும் விதத்தில் ஜெயபிரகாஷ் நாராயன் அவர்களும் , இளைஞர்கள் திறமைசாலிகள் அவர்களுக்கு எங்கள் அலோசனை , வழிகாட்டுதல் என்றும் உண்டு என்று முன் மாதிரி கிராமத்தை உருவாக்கிவரும் , அய்யா அப்துல் கலாம் அவர்களின் நண்பருமான இளங்கோ அவர்கள் பேசினார்கள்.

அய்யா இளங்கோவிடம் உங்கள் ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா என்றும் , உங்கள் முன்மாதிரி கிராமத்தை பார்க்கலாமா என்றும் கேட்டேன். நிச்சியமாக என்றார்!

அதோடு இளங்கோ என்று கூகிளில் தேடுங்கள் நாங்கள் செய்தது பற்றியும், எங்கள் கிராமம் பற்றியும் தகவல் கிடைக்கும் என்றார் மிக எளிமையாக!

விழா நாட்டு வாழ்த்தோடு ஆரம்பித்தது அதுவும் தமிழில்! சென்னை மழைக்கு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

மொத்தத்தில் இது விழா போன்று இல்லை சாதாரண மக்கள் கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது, நிறைவாய் இருந்தது!

#ChennaiNext

ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் அண்ணாவிற்கு நன்றி!

தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தலும் , ரஜினி பேச்சும்

தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற ரஜினிகாந்த் அவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

தமிழ் நாட்டைத்  தலைமை இடமாகக் கொண்டு , தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்கள் சேர்ந்த ஒரு சங்கத்திற்கு தமிழ் நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

மற்ற மாநில நடிகர்கள் முதல் உலக நடிகர்கள் வரை:
இங்கே எல்லா மாநிலத்து நடிகர்களும் நடிக்கிறார்களே எப்படி தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயரிடுவது? ஒரு தலைப்பட்சமானதே என பலர் நினைக்கலாம்!

இங்கே வட இந்திய நடிகர்கள் கூடத்தான் நடிக்கிறார்கள் அப்படி இருக்க எப்படித்  தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் ?

இப்பொழுது எல்லாம் வெளிநாட்டு நடிகர்களும் கூட இங்கே வந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக வெளிநாட்டு பெயரையும் சேர்த்தா வைக்க முடியும் ? இல்லை இந்திய நடிகர் சங்கம் என்றுதான் வைக்க முடியுமா ?

யார் வேண்டுமானால் வரலாம் போகலாம். ஆனால் எங்கே அது துவங்குகிறது , யாரை நம்பி அது எடுக்கப் படுகிறது? யாருக்காக எடுக்கப் படுகிறது. யார் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் ?

மற்ற மாநில , நாட்டு நடிகர்கள் நடிக்க கூடாதா ?
அப்படி யாரும் சொல்ல வில்லையே , சொல்லவும் மாட்டார்களே ?!  மற்ற நடிகர்கள் நடிக்கத் தடை என்று எப்படி சொல்ல முடியும்.

உறுப்பினர்கள்:
தமிழர்கள் மட்டும்தான் உறுப்பினர் ஆக வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லையே! கலைஞர்கள் யாரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராகினும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் அனைவரும் உறுப்பினர் ஆகலாமே!

மற்ற மாநில நடிகர்கள் சங்கத்தின் பெயர்கள்?
தெலுங்கு , மலையாளம் , இந்தி சங்கங்களுக்குத் தென் இந்திய நடிகர் சங்கம் என்றோ , இந்திய நடிகர் சங்கம் என்றோ பெயர் இருப்பதாய்த் தெரியவில்லை . அதனால் மற்றவர்கள் அங்கு போய் நடிக்காமல் இருக்கிறார்களா ? இல்லை அவர்கள்தான் இவர்களை கூப்பிடாமல் இருக்கிறார்களா?

கோடம்பாக்கம்/கோலிவுட்!
தமிழ் சினிமாவில் நடிக்க வருபவர்கள் முதலில் வர நினைக்கும் இடம் கோடம்பாக்கம்! தமிழ் சினிமாவை கோலிவுட்! என்றுதான் உலகம் அழைக்கிறது. அப்படி இருக்க பெயர் மாற்றம் ஒன்றும் தவறு இல்லை எனத் தோன்றுகிறது.

உலக அளவில் தமிழ் மொழி சினிமாவை எப்படி மொழி எடுத்துக் காட்டுகிறதோ. அதன் தலைமையாய்த் திகழும் தமிழ் நாட்டின் பெயரை வைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

for ->https://ezhuthu360.wordpress.com

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பயணிக்க தயார் நிலையில் உள்ள ரயில்| படம்: ம.பிரபு.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் – ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் – அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் – வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் – அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் – சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் – கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு – ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

ரயில்கள் எத்தனை ?

*தினசரி கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 95 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே 97 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 முறை ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

நன்றி: தி ஹிந்து தமிழ்