ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?!
ஜாதிய உணர்வு என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. அதனை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் முயற்சி செய்தால் எதிர் கால சந்ததி நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது உடனடி நிகழ்வல்ல!
ஜாதிய ஒழிப்பு என்று பேசினாலே அம்பேத்கர் கூறிய அகமண திருமண முறை பற்றி எல்லோருக்கும் நினைவு வரும். ஜாதி மாற்றித் திருமணம் செய்வதுதான் அது. அப்படிச் செய்தால் ஜாதி ஒழியும்.
பெரியார் முன் வைத்த அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம்.
அனைவரும் கோவிலில் வழிபடும் முறை.
தீண்டாமை பெருங்குற்றம் என்ற விழிப்புணர்வு.
ஜாதி பற்றிய புரிதலை குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஜாதி என்றால் என்ன?ஏன் அது வந்தது?எப்படி வந்தது? அதனால் உண்மையில் நன்மை உண்டா ? யாருக்கு அதிலே நன்மை என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் .
நம் ஜாதி உயர்ந்தது என்று சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை, அதே சமயம் மற்ற ஜாதி தாழ்ந்தது என்று சொல்லிக் கொடுப்பது தவிர்க்கப் பட வேண்டும் .
நீ என்ன ஜாதி என்று கேட்பவர்களை தனிமைப் படுத்த வேண்டும்.
கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.
ஜாதிய வன்முறைகளைத் தூண்டிவிடும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஜாதி சங்ககங்களுக்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய கண்காணிப்பு வேண்டும்.
பள்ளி , கல்லூரிகளுக்கு ஜாதிப் பெயர்களை சூட்டுவதை தடை செய்ய வேண்டும்.
ஜாதிய வன்முறைகளின் தீமைககள் பள்ளிக் , கல்லூரிப் பாடங்களாக வேண்டும்.
மேல் நிலைப் பள்ளி வரை ஜாதிச் சான்றிதழ் கேட்க கூடாது.
ஜாதிய இட ஒதுக்கீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ஒதுக்கீட்டுக்கு வர வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
கவுரவக் கொலைகளுக்குத் கடுமையான தண்டனை தர வேண்டும்.
ஜாதிய வன்முறையத் தூண்டுபவர்களுக்குத் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குத் தண்டனையை அதிகப் படுத்த வேண்டும்.
பெரியார் பரிந்துரைத்த பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் வைப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பெற்றோரின் வளர்ப்பு என்பது இதிலே மிக முக்கியம். பெற்றோர்கள் சமூகப் பொறுப்புடன் இருந்தால் நல்லது.
வெறும் கல்வியோ , விழிப்புணர்வோ இதனைச் செய்து விட முடியாது.
ஜாதி என்ற போதையைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
இளைஞர்கள் எல்லாவற்றிக்கும் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். ஜாதி என்ற கோட்பாட்டிலும் அதனைப் பின்பற்ற வேண்டும்.
எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம்.
ஜாதியின் பெயரால் போட்டி அரசியல் நடத்துவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு .
ஏற்றத் தாழ்வான சமுதாய முனேற்றம் என்பது , எப்பொழுதும் பிரச்சனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளைய சமூகம் தங்களுக்குள்ளே தனித் தீவாய்ப் போய்விடும்.
மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!
படங்கள்: கூகிள்
முந்தைய பதிவிற்கு :சதி-சாதி-சா”தீ”!?!!#3