Archive for August, 2015

வீடுகள் எரிந்தது
இல்லை எரிக்கப் பட்டது
உடைமைகள் எரிந்தது
இல்லை எரிக்கப் பட்டது
பயந்து ஓடினர்
இல்லை பயமுறுத்தப் பட்டனர்
எங்கே நடந்தது
இங்குதான் நடந்தது
அடிமை தேசத்திலா
இல்லை சுதந்திர தேசமேன்பார்
என்ன நடந்தது
ஒன்றுமில்லை! ஆனால்
நடந்த தேர் எரிந்தது
முடிவில் கடவுளும் எரிந்தார் !
சாம்பல் மிஞ்சியது!!

Image result for fire

picture: Google

நம்மைச் சுற்றி நடக்கும் பல குற்றங்கள்தான் கதை (மருந்து கம்பெனிகளின் உலகச் சந்தை, அதை வைத்து நடக்கும் குற்றங்கள்),அதனை ஹீரோ தானே தேடிச் சென்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக் கதை. ஆம் தினசரி குற்றங்களாக நாளிதழ்களில் நாம் படித்ததும் ,டிவிக்களில் நாம் கேட்டதையும் சுபாவுடன் சேர்ந்து கதையாகக் கொடுத்து , அதைத் திரைக் கதையில் வெற்றியடையச் செய்துள்ளார் ஜெயம் ராஜா என்கிற இயக்குனர் மோகன் ராஜா ( ஜெயம் ரவி அண்ணன்தான்பா -குழப்பிக்காதீங்க! புதுசா கேட்ட பெயர் மாறி இருக்கு என்று நினைத்து!!).

File:Thani Oruvan.jpg

கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் திரையில் அரவிந்த்சாமி! நடிப்பில் அசத்தியுள்ளார். பிசினஸ் பக்கம் போகாம தொடர்ந்து  நடித்து இருந்திருக்கலாம் (எப்போதாவது மட்டும் நடிக்காம)என்ற எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.பெரிய மிரட்டல் இல்லை ஆனால்  அமைதியான ,அதே வேளையில் அசுர குணத்துடன் , புத்திசாலித் தனத்துடனும் கூடிய வில்லன் இவர். பல இடங்களில் அவரின் சிரிப்பே நடித்து விடுகிறது! வில்லன்தான் என்றாலும் ஹீரோ ,ஹீரோயின் போல மனதில் நிற்கிறார்.அவரைச் சுற்றித்தான் கதையே! ஆனாலும் கிளைமாக்ஸ் சீன்ல (நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்க வச்சுடுவார்!!) செம மாஸ் காட்டி இருக்கிறார்!!

படத்தில் வில்லனுக்குத்தான் அறிமுகக்  காட்சி!! அதுவும் மாஸ்(கொஞ்சம் சினிமாத்தனம்)! தனக்கு மூன்று பினாமிகள்; கூடவே அப்பாவி அப்பா இவர்களை வைத்துக் கொண்டு பெரிய குற்றங்களைச் செய்கிறார் அரவிந்த் சாமி. அந்தப் பெரிய குற்றங்கள் சிறு சிறு குற்றங்களாக சிறுவயதில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது!ஆனால் சிறு வயது பையனுக்கு ஏன் இந்த குற்ற எண்ணம் என்று தோன்றினாலும், ஏன் இருக்கக் கூடாது என்பதற்கு நம் சமூகத்தையே உதாரணமாகக் காட்டுகிறார் இயக்குனர்.

நாசர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சந்தர்ப்ப அரசியல்வாதியாக (அமைதிப் படை மணிவண்ணன் என்று சொல்லலாம்) நடித்து உள்ளார். அரவிந்த் சாமிக்கு அப்பாவி அப்பாவாக தம்பி ராமையா(சினிமாத்தனமான அப்பாவி)! சீரியஸ் ஆன இடங்களிலும் வசனத்தாலும் , உடல் மொழியாலும் நம்மை சிரிக்க வைக்கிறார். கடைசியில் பாசத்திலும் கச்சிதமாக நடித்துள்ளார்.

போலிஸ் அதிகாரியாக ஜெயம் ரவி! ட்ரைனிங் போதே சமூக ரவுடிகளை  நண்பர்களுடன் (நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்)சேர்ந்து  துவம்சம் பண்ணுகிறார். ஜெயம் ரவி போலிஸ் அதிகாரி என்று பக்கம் பக்கமாக பேசி நம்மை வெறுப்பெல்லாம் செய்வதில்லை. கதைக்குத் தேவையானதை பேசி இருக்கிறார்!

இயல்பாக அதேவேளையில் பஞ்ச்ஆக  இருக்கிறது பட வசனங்கள். “நாம் என்ன செய்கிறோம் என்பதை நாளை வளரும் இளம் சிட்டுக்கள் கவனிக்கிறார்கள் ,நாம பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”- என்று நயன்தாராவிடம் சொல்லும் பொழுதும் , நயன்தாரா காதல் சொல்லும் பொழுது பிடித்த மாறியும் , பிடிக்காத மாறியும் நடந்து கொள்வது, அரசியல்வாதிகளின் தலை எழுத்தை தீர்மானிப்பது பெரு வியாபாரிகள், ஆசையில் பேராசை என்பது எனக்கு நல்லது செய்வதில் இருக்கிறது என்று சமூக அக்கறையுடன் கர்ஜிப்பதிலும், ஹீரோயின்களை காப்பாற்றுவதிலும், நண்பர்களுக்கு, காதலிக்கு  பிரச்னை என்றால் வேதனைப் படுவதிலும், சமூக அக்கறை உள்ளவனின் பிடிவாதம் எப்படி இருக்கும் என்பதிலும் நேர்த்தியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி( தம்பி என்று பாரமால் இயக்குனர் நல்ல வேலை வாங்கி உள்ளார்!). ஜெயம் ரவியின் நடிப்பிற்கு நல்ல தீனி.

அரவிந்த் சாமி போன்ற வில்லன்களுக்கு ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். உன் எதிரியைச் சொல் ,நீ யார் என்று சொல்கிறேன் என்பதற்குத் தேவையான தகுதியை சிறுவயதில் இருந்தே வளர்த்துக் கொள்ளும் ஜெயம் ரவி , அவரைத் தேடிச் சென்று மோதுகிறார். ஒரு கட்டத்தில் தன் பிரச்சனைகளுக்குக் காரணம் ஜெயம் ரவி என்று தெரிய வர , இருவருக்குமிடையே என்ன நடக்கிறது , யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விறு விறுப்பாக திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்!

நயன்தாரா! நயன்தாராவிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் அவரின் அறிமுகத்திற்கு கைதட்டலும் , விசில் சத்தமும் பறக்கிறது. அதே சமயம் நல்ல வசனத்திற்கும், ரசிகர்கள் அப்டியே நடந்தது கொண்டது கொஞ்சம் ஆரோக்கியம். ஜெயம் ரவிக்கு காதல் சொல்லும் பொழுதும், ஜெயம் ரவிக்கு உதவி தேவைப் படும் பொழுது  அவர் பேசுகின்ற வசனம் ஆகட்டும், ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி வேதனையில் இருக்கும் பொழுது நயன்தாரா பேசுகின்ற வசனம் போன்ற ஒவ்வொரு இடத்திலும் நயன்தாரா நினைவில் நிற்கிறார். இரண்டாவது பாதியில் அவருக்கு என்றே ஒரு பாடலை நுழைத்து இருக்கிறார்கள்! அந்தப் பாடல் இல்லாமலும் படம் நன்றாகவே இருந்து இருக்கும். படத்தில் அவ்வளவு விறுவிறுப்பு(வெறுப்பில்லா விறுவிறுப்பு!!)

ஹிப்ஹாப் தமிழனின் இசை ஓகே! சினிமாட்டோகிராபி ராம்ஜி,எடிட்டிங் சூர்யா (எடிட்டிங் நன்றாக இருந்தது) இனி  ஜெயம் ராஜா “ரீமேக் ராஜா” இல்லை, இவரா இது என்று பிண்ணி எடுத்துள்ளார்; அதற்காக அவர்க்கு  சபாஷ் போடலாம்!

நல்ல வேளை இந்தப் படத்தை ரஜினி,அஜித்,விஜய் என்று யாரும் நடிக்க வில்லை. நடித்து இருந்தால் ஹீரோக்கள் கொண்டாடப் பட்டு இருப்பார்கள். ஜெயம் ரவி இந்தக் கதைக்கு ஏற்ற ஹீரோ! அதனால் கதையும் நினைவில் நிற்கிறது!!

மொத்தத்தில் இது ஒரு நல்ல படம்( உலகத்தரமானாதா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , உலகத்தின் தரம் பற்றி தெரியாது ;ஆனால் இது இந்த மண்ணிற்க்கான படம்).எல்லோரும் பார்க்க வேண்டிய ப(பா)டம்.

படங்கள்: விக்கிபீடியா , கூகிள்

இலங்கை என்றதும் பௌத்தம் நினைவிற்கு வருகிறதோ இல்லையோ , தமிழர்கள் அவர்களின் நிலைமை நினைவிற்கு வந்து விடுகிறது. அதுவும் போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழர்களின் நிலைமை என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி. பதில்தான் கிடைத்த பாடில்லை!

ஆகத்துப் 17 இல் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தில் தன்னை ஜனநாயக நாடாக (ஓரின ஜனநாயகம்) நிலை நிறுத்திக் கொண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் ராஜபக்சேவை இந்தத் தேர்தல் ஓரம் கட்டி உள்ளது, கொஞ்சம் ஆறுதல்.ஆறுதல் தமிழர்களுக்கு மட்டும் அல்ல , சிறிசேனா,ரணில் மற்றும் சந்திரிகாவிற்கும்தான் என்பது சிங்களமே அறிந்த உண்மை.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கோ , உலகிற்கோ, தமிழர்களுக்கோ கிடைத்த வெற்றி இல்லை. ராஜபக்சேவைப் பிடிக்காத சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கிடைத்த வெற்றி. விடுதலைப் புலிகளை அழித்ததை வைத்தே தன்னை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே நினைத்து இருந்ததை மக்கள் தகர்த்தெறிந்துள்ளனர். ஆனால் இந்தத் தோல்வி ஒன்றும் படு தோல்வி இல்லை அவருக்கு. இந்தத் தேர்தலில் அவரும் வெற்றி பெற்றுள்ளார் . அவர் சார்ந்த கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை.

ராஜபக்ச| கோப்புப் படம்: ஏ.பி.
விடுதலைப் புலிகள் சிங்கள கட்சிகளுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது உண்மை. அவர்களை ஒழித்ததை சிங்கள மக்கள் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட இந்தத் தேர்தலில் அதனை விடவும் பல காரணங்கள் அந்த மக்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. சரி நாம் வேலை அதனை ஆராய்ச்சி செய்வதன்று. அதை அப்படியே சிங்கள மக்களிடம் விட்டு விடலாம்.

நாம் பேச வருவது இதுதான் , 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 29 உறுப்பினர்கள் அவரவர் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் வீதப்படி கட்சித் தலைமையால் நியமிக்கப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன.  தமிழ் தேசியக் கூட்டணிக்கு 16 இடங்கள் கிடைத்துள்ளன. இடதுசாரி சிங்களக் கட்சியான ஜனதா விமுக்த பெரமுன 6 தொகுதி கிடைத்து உள்ளது.

ரணில் ஆட்சி அமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுகிறது .தமிழர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மைச் சமூகத்தவர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்க முடியும். அல்லது ஜனதா விமுக்த பெரமுனாவின் 6 இடங்கள் கொண்டு அவர்கள் ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சிறிசேனா கட்சி ரணிலுடன் கை கோர்த்து உள்ளது. ஆம் ரணில் கட்சியும் , சிறிசேனா கட்சியும் 2 ஆண்டுகளுக்கு கூட்டாச்சி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளன. தமிழர்கள் இல்லாமல் ஆட்சி செய்வது கூட்டாச்சி என்று எப்படி சொல்ல முடியும் , அது கூட்டாளிகளின் ஆட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்க முடியும்.

போர்க் குற்ற விசாரணை , சர்வதேச நாடுகளின் கண்காணிப்பு, பண்டைய சீன ஆதரவு நிலை போன்றவற்றில் இருந்து தன்னை காப்பற்றிக் கொள்ளவும் , இன்றைய அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை உரத்துச் சொல்லவும்தான் இலங்கை இந்தத் தேர்தலைப் பயன்பத்தி உள்ளது என்பது சர்வதேச அரசியல் விமர்சனர்களின் கருத்தாக உள்ளது.

சிறுபான்மையினரை மதிக்காத ஒரு பெரும்பான்மை நாட்டிலே ,தமிழர்களின் மீள் குடியேற்றம்,காணமல் போன தமிழர்களை கண்டுபிடிப்பது ,அரசியல் விடுதலை, தனி நாடு கோரிக்கை, சிங்கள -தமிழ் அரசியல் பகிர்வு,போருக்குப் பின் இலங்கை பொருளாதாரம், சிங்கள பேரினவாதம்,முஸ்லிம்-சிங்கள பிரச்சனை,ராஜபக்சே,சர்வதேச விசாரணை ,உள்நாட்டு விசாரணை ,கூட்டாச்சி என சிறிசேனாவிற்கும் , ரணிலுக்கும் மிகப் பெரிய சவால் இப்பொழுது காத்து இருக்கிறது. சிறிசேனவும் , ரணிலும் அதே பெரும்பான்மை சமூகத்தினர் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போரில் பாதிக்கப் பட்டது தமிழர்களை விட யாரும் பாதிக்கப் பட்டு இருந்திருக்க மாட்டார்கள். அந்தப் போரின் முடிவுகளில் இருந்துபாடம் படிக்க வேண்டியது தமிழர்கள் மட்டும் இல்லை பெரும்பான்மை சிங்களவர்களும்தான்.

இடது ரணில் விக்கிரமசிங்கே, வலது சிறிசேனா
சிறிசேன மற்றும் ரணில் அவர்கள் புதிய நாட்டையும் , அரசியலையும் கட்டி எழுப்புவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சிங்களவர்களை முழுவதுமாக நம்பி விட முடியாது .கடந்த கால வரலாறே அதற்க்குச் சாட்சி.இருந்தும்  தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகளும் , இந்த ஆட்சியும்  எந்த அளவிற்கு  நன்மை தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காலமே அதற்க்கு பதில் சொல்லும்.

படங்கள்: தி ஹிந்து தமிழ் , நன்றி!

தேர் எரிந்து அணைந்தும்
அணையவில்லை சாதித்”தீ”!

இந்தியா என்ற பல மொழிகள், பல இனங்கள் கொண்ட நாடு இன்று 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்று இருக்கின்றோமா?

இன்றைய சுதந்திர தின உரையில் கூட தமிழ்நாடு முதல்வர் “அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாததுமே உண்மயான சுதந்திரம்” என்று கூறி இருந்தார். உண்மைதானே ?! ஏற்றத் தாழ்வு இல்லாத ஒன்றுதானே சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறுதான் நம் நாடு இருக்கிறதா ?

ஒரு புறம் பிரமாண்ட வளர்ச்சி , மறுபுறம் ஏழ்மை! ஒருபுறம் பல மதங்கள் வாழும் மதச் சார்பற்ற நாடு, மறுபுறம் மத மோதல்கள்! அதோடு இல்லாமல் உலகில் எங்குமே இல்லாத “ஜாதி” என்ற பிரிவினை சில உயர் வகுப்பு ஜந்துக்களால் இந்த நாட்டில் மட்டும் தானே ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கிறது. அதன் விளைவுகள் இன்றும் கூட இந்த சுதந்திர நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஒரு சமூகம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேறி விட முடியாது. ஒருவகையில் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருக்க சமூக விடுதலை அடையாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . இந்த நாட்டிற்க்கு சட்டம் அமைத்த அம்பேத்கர் கூட இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் நேரத்தில் , இது பிறரால் நிந்திக்கப் பட்ட குறிப்பிட்ட சில மக்கள் மேல் நிலை அடையும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்க வேண்டும் , பிறகு இது மறுபரிசீலனைக்கு உரியது” என்று சொல்லி இருந்தார்!

உண்மையில் அந்த மக்கள் மேல் நிலை அடைந்தனரா? மேல் நிலை அடைய விடப் பட்டனரா? சலுகை பெறுகிறார்கள் என்று முத்திரை குத்தப் பட்டார்களே அன்றி அவர்கள் தங்களால்தான் அப்படி ஆக்கப் பட்டனர் என்று வெளிப் படையாக சொல்ல முடிகிறதா ? இல்லையே !!

“நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று குறுப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,அதுபற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றம் முடக்கத்தைப் பற்றி கூறி இருந்தார். இது ஜாதிய ஏற்றத் தாழ்விற்கும் பொருந்தும்.

சமூகம் என்ற அமைப்பே “எல்லோரையும் ஒருங்கிணைத்து வாழ்வதுதானே” ஒரு பெரிய நாட்டிலே , ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் எல்லா நலன்களும் , வளங்களும் பெற்று வாழ்வது எப்படி முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும். அந்த வகையில் அவர்களை அப்படி வாழ விடாமல் செய்தவர்களை நாம் என்ன என்று சொல்வது , எப்படி அழைப்பது , எந்த வழியில் வகைப் படுத்துவது ?! அப்படியானால் நமக்கு காந்தி சொன்னது போல “இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ ?!”

இல்லை இன்னும் சட்டங்கள் இங்கே கடுமையாக்கப் பட வேண்டுமா ? ஆனால்

“நமது அரசியல் சாசனத்தின் செயல்பாடு என்பது அரசியல் சாசன ஷரத்துக்களை மட்டுமே சார்ந்தது அல்ல, அரசின் அங்கமான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் அரசியல் சாசனம் வழங்க முடியும். மக்களும் அவர்கள் உருவாக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அரசியலை பொறுத்தே அரசின் இந்த உறுப்பு அமைப்புகள் இயங்கும். இந்திய மக்களும் அவர்களின் கட்சிகளும் எதிர்காலத்தில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்பதை எப்படி கணிக்க முடியும்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார்.

ஆக சட்டம் மட்டுமே இதனைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்பது நமக்கு தெளிவாகிறது! அப்படியானால் வேறு எப்படித்தான் இதனைப் பெறுவது ?

இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதமாகச் சொல்லி இருந்தார். அந்த கூட்டு முயற்சி என்பது வெறும் ஏழை -பணக்காரன் , மொழி -இனம் ,மதம் என்று இருந்து விடாது , சிலரால் உருவாக்கப் பட்ட ஜாதிய முறைகளும் , அந்த ஜாதியத்தால் உயர்ந்த -பாதிக்கப் பட்ட மக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் . அப்படி இல்லாமல் போனால் அது கூட்டு முயற்சியாக இருக்க முடியாது!

இன்றும் கூட சமுதாயத்தின் ஒற்றுமையை சீர் குலைத்து விடுபவர்கள் (குற்றவாளிகள்) மத்ததின் பெயரால் , ஜாதியின் பெயரால் , பணத்தின் உதவியால் தப்பித்து விடுகிறார்கள் .இத்தகைய செயல்பாடுகள் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதனையே கேள்விக்கு உள்ளாக்கி விட்டது.

தி ஹிந்து தமிழ் நாளிதழின் தலையங்கத்தில் இருந்து “சாதியை ஒழிப்போம், மதவாதத்தை மாய்ப்போம் என்று கூறிவிட்டுச் சாதி உணர்வை விசிறிவிட்டு மதப்பூசல்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்”

இந்தக் கூற்று இதனை உறுதிப் படுத்துவதைப் போல உள்ளது. ஆக இதில் நம் எல்லாச் சமூகத்திற்கும் பங்கு உள்ளதோ என்ற ஐயப்பாடு உள்ளது .

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அது

“சமூக விடுதலையே, உண்மையான விடுதலை” என்ற பெரியாரின் வாக்கு!!

எவ்வளவு ஆழமானது!உண்மையானது!!

ஆம் நாம் இன்று கடந்து வந்த தொலைவை விட , இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகு தூரத்தில் உள்ளது. அதனை அடைய பல சவால்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.அதுவரை இந்த சுதந்திரம் என்பது நமக்கு ஒரு கருவியாகத்தான் இருக்குமே தவிர கொண்டாட்டத்தின் எல்லையாக இருக்காது.

படங்கள்: கூகிள்

நன்றி: தி ஹிந்து தமிழ் , தினமணி

கோட்டிக்காரன் ‏@shanth_twits Aug 5
இந்த க்ரீன் டீ குடிக்றதால க்ளாஸ் அலச கொஞ்சம் ஈசியா இருக்றத தவிர்த்து வேற எந்த நன்மையும் தெரியல.. :-//

♥ッSt.Vishnu ♥ッவிஷ்ணு ‏@Vishnu06Jaffna 5m5 minutes ago
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கே நல்ல மனிதர்களும் எரிக்கப்படுகின்றார்கள் – “சேகுவாரா”

ηιvεтнα ‏@niviie_ 14m14 minutes ago
மத்தவங்களுக்காக பாவம் பாக்காம இருந்தாலே வாழ்க்கைல பாதி உருப்பட்றலாம்..

வியாபாரி.. ‏@RiddleTiger 29m29 minutes ago
பாசம் வைத்த இதயங்கள் தான் பாவப்பட்டவை, மறக்க நினைக்கும் போதெல்லாம் அதிகமாக நினைக்கிறது. வலியில் துடிக்கிறது.

இளையகாஞ்சி ‏@ilayakaanchi 30m30 minutes ago
ஒருவழியா வாழ்க்கை..நல்லா ப்ரகாசமா போய்க்கிட்டிருக்கும் போது..”இதுல..எப்டினே..லைட் எரியும்னு”கேட்டுக்கிட்டே ஒருத்தன் வருவான் பாருங்கே..

காட்டுப்பயல் ‏@sundartsp Jul 18
ஜாதி சங்க போஸ்டர்களில் ஜாதிமதம் பார்க்காத விலங்குகளை போடுவது முரண்

நுண்மதியோன் ‏@Nunmathiyon May 8
வாழ்க்கைல எவ்வளவு சம்பாதிக்கிறோம்றது
முக்கியமில்ல!
அதை அனுபவிக்க எவ்வளவு தெம்பா இருக்கோம்றதுதான் முக்கியம்!

தமிழ்நிலவு ‏@tamilprem18 2h2 hours ago
ஞாயித்துக்கிழமையானா போதும் காலங்கார்த்தால தூக்கம் கலைஞ்சிடும்#ச்சைஐ

நன்றி: த்விட்டேர்ஸ்

அட!

அட!

எதிர்காலம் கேள்விகுறி!

எதிர்காலம் கேள்விகுறி!

ஹி ஹி

ஹி ஹி

IMG-20150805-WA0007

IMG-20150803-WA0023

இரண்டு மாதங்கள் கடந்தது , மூர்த்திக்கு கம்பெனியில் இருந்து மெயில் வந்தது , இந்தமுறை உடனடியாக வேலைக்கு வந்து சேர வேண்டும் என்றும் , ட்ரைனிங் சென்னையில் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. உடனடியாக தனது சீனியர்க்கு கால் செய்து “அண்ணா ! ஒரு நல்ல செய்தி , கம்பெனியில் இருந்து மெயில் வந்து ஜாயின் பண்ணச் சொல்லி! “என்றான் .

ஹேய்! கன்கிராட்ஸ் ! எப்ப , என்ன வரும் என்று தெரியாது இதுதான் IT !” என்று பஞ்ச் அடிச்சார் சீனியர் ராஜ்! கூடவே எங்கு போவது , தங்குவது ,என்ன சொல்லித் தருவார்கள் போன்ற விவரங்களைச் சொன்னார்.

தேங்க்ஸ் அண்ணா ! சென்னை போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லி, போன் காலை கட் செய்தான். அடுத்து அவன் நண்பன் கார்த்திக்கு அந்தத் தகவலைச் சொல்லும் பொழுதே ,அவனுக்கு கிருத்திகா நியாபகம் வந்தது.

அட ! இந்த கிருத்திகா நம்பர் கொடுத்து இருந்தால் சொல்லி இருக்கலாம், இந்த பொண்ணுங்க நம்பர் வாங்கி அப்டி என்ன பண்ணிட போறோம்! நான் நம்பர் கொடுத்தும் இந்த பொண்ணு ஒரு மெசேஜ் கூட பண்ணலயே ,அட பிரண்ட்ஸா கூட பழக மாட்டங்களோ  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு ஞாயிறு அன்று கோவையில் இருந்து சென்னைக்கு பேருந்து ஏறினான்! ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து , அப்படியே சென்னைல வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று நினைத்தவாறே போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான், அப்படியே தூங்கி விட்டான்.

பேருந்து சேலம் வந்த பொழுது , விழித்துக் கொண்டவனுக்கு ஆச்சர்யம்! ஆமாம் அவன் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

ஹாய் , இது கிருத்திகா!

அவ்வளவுதான் , வேற எந்தத் தகவலும் இல்லை!

இந்த பொண்ணுங்க !எப்பவும் இப்படியா , இல்லை இப்பத்தான் இப்படியா ? ஒரு கால் பண்ண மாட்டாங்களா?என்று சொல்லிக் கொண்டே கால் செய்தான்!  மொபைல் ரிங் சத்தம் பக்கத்தில் கேட்பது போல் இருந்தது!ஆமாம் , கிருத்திகாவும் அதே பேருந்தில் இரண்டு சீட்ஸ் தள்ளி தனது தோழியுடன் அமர்ந்திருந்தாள்!

நம்மாளுக்கு இது கனவா , நினைவா என்றே தெரியவில்லை! பஸ்ஸை விட்டு தனியே பறந்து கொண்டிருப்பதைப் போல ஒரு பீலிங்க்ஸ்!!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#2