தீர்வு கிடைக்கவேண்டி
தீயிட்டுக் கொண்டாயோ?
உரத்துக் குரல் கொடுக்க
தமிழ் உணர்வைத் தாங்கும்
இந்த உடல் வேண்டாமா?!
தீ தான் தீர்வென்று
முடிவுக்கு வந்தது ஏனோ?
உடல் இன்றி
உயிரேது?
உயிர் இன்றி
உணர்வு ஏது?
உணர்வின்றி போர்க்குணமேது?
இதை உணர்ந்து வா!
மீண்டு(ம்) வா!
நலம் பெற்று
எழுந்து வா!
வந்தாரை வாழ வைக்கவாவது
தமிழன் வாழ வேண்டாமா?!