Archive for September, 2016

#ரயில்வே_பட்ஜெட்

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அப்போ இனி ரயில்வே அமைச்சருக்கு வேலை இல்லையோ?!

#வங்கிச்_சேவை

ரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: மத்திய அரசு பரிசீலனை

ரேஷன் கடைல சர்க்கரை, மண்ணெண்ணையே அளவில் பாதிதான் கிடைக்குது!

#நிலத்தடி_நீர்

நிலத்தடி நீர் சுரண்டலில் சென்னை முதலிடம்

கூடவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிலத்தடி நீரையும் சேர்த்தே!

#மருத்துவத்_துறை

கழக ஆட்சியில் மருத்துவத் துறையின் மகத்தான சாதனைகள் நினைவுக்கு வந்து வந்து போவது ஏனோ?!

#தொடரி

தொடரி  பற்றி போஸ்ட் போடலானா நம்மல பேஸ்புக்க விட்டு விலக்கி வச்சுடுவாங்க போல, ஆனா என்னன்னு போஸ்ட் போடறது?! எங்க தொடங்கறது?!

#பணக்காரர்கள்_பட்டியல்

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 9-ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதல் இடம்

இதுக்கெல்லாம் நாம் வாங்கிய ஜியோ சிம் தான் காரணம்!

#கோகினூர்_வைரம்

இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் இருக்கும் கோகினூர் வைரத்தை கொண்டு வருவதற்கு எல்லா வழிமுறைகளையும் ஆராய்வோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கிரேட் பிரிட்டன்!! அவர்களே தரமாட்டார்களோ?!

#காவிரி

பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும் , புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்ப்பவள்! பெருமை சேர்ப்பதால் பிறந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா?!

#காவிரியும் ஒரு பெண்தானே?!

 

இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு உனக்குத்தான் கிடைக்க வேண்டும் அலெக்ஸ்!

உலகம் உன்னிடம் இருந்து கற்றுக் கொள்கிறது!

#Nobel_Prize_for_Peace #Alex_6Yrs_old

Source: The White House

சிக்கன் பிரியாணி / ChickenBriyani

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி-ChickenBriyani

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாறார்னு சொன்னாங்களே!

அது வேற வாய்!!

எதற்கும் காவேரி பற்றியும் பேசிகிட்டு இருங்க ஒரு ஓரமாவது!

அமைதிப் பூங்காவில் சிறைகளே இல்லாத பொழுது,,,,,

குற்றம் நிரூபிக்கப் படாத வரை எவரும் குற்றம் சாட்டப் பட்டவர்தான் அன்று குற்றவாளி அல்ல என அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. அதையேதான் சட்டமும் சொல்கிறது.

நியாயத்தின் மீதான மர்மங்கள் நீடிக்கும் பொழுது அதிகாரத்தின் மீதும் மர்மங்கள் தொடர்கின்றன.

ஸ்காட்லாந்து போலீஸ் கட்டுப்பாட்டில் தற்கொலைகள் நடந்ததாய் படித்ததில்லை!

மின் கம்பிகள் எட்டும் உயரத்தில்! #மின்மிகை_மாநிலம்

காவல் நிலையங்களில் மட்டும் அல்ல சிறைகளிலும் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா) பொருத்த வேண்டிய நேரமிது.

நீங்கள் சுற்றி வளைச்சு பிடிச்சோம்னு சொல்லும்போதே சந்தேகமாத்தான் இருந்தது!

மறக்க முடியுமா நத்தம் விஸ்வநாதன்களை!

தீர்வு கிடைக்கவேண்டி
தீயிட்டுக் கொண்டாயோ?
உரத்துக் குரல் கொடுக்க
தமிழ் உணர்வைத் தாங்கும்
இந்த உடல் வேண்டாமா?!

தீ தான் தீர்வென்று
முடிவுக்கு வந்தது ஏனோ?
உடல் இன்றி
உயிரேது?
உயிர் இன்றி
உணர்வு ஏது?
உணர்வின்றி போர்க்குணமேது?

இதை உணர்ந்து வா!
மீண்டு(ம்) வா!
நலம் பெற்று
எழுந்து வா!

வந்தாரை வாழ வைக்கவாவது
தமிழன் வாழ வேண்டாமா?!

#கேன்_வாட்டர் குடிக்க ஆரம்பிச்ச பிறகு
நிலத்தடி நீர் , ஆற்று நீர் மறந்து போனது!

#பீட்சா_பர்கர் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு
அரிசியும், விவசாயமும் மறந்து போனது!

#அரசியல் என்பது
தேர்தலோடு முடிந்து விடுகிறது!

#தல_தளபதி தெரியும்
தல காவேரி தெரியாது!

#வெள்ளம் வந்தாதான்
நதியே ஞாபகம் வருது!

#போராட்டம் என்பது
சமூக வலைதளத்தோடு முடிந்து விடுகிறது!

தமிழ் நாட்டுல கலவரம் என்று சொன்னீங்க பாருங்க அப்பவே தெரிஞ்சுது,
நேரா வெளிநாட்டுல இருந்துதான் வறீங்கன்னு!!

#காவேரி #காபலியாய் இருந்திருக்கலாம்!
விவாதமாவது நடந்திருக்கும்!!

#கம்யூனிஸ்ட்_கட்சியா? அப்டினா?!

Kerala U R Great!

‘பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.

கேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒருவேளை #காவிரி நீரை #புனிதம், #புண்ணியம் என்று சொல்லி இருந்தால் மத்திய அரசே நமக்கு #போஸ்ட்ஆபீஸில் கிடைக்க உதவி செய்திருக்கும்!

காவிரி நீரை! #வாழ்வாதாரம் என்றல்லவா சொல்லி விட்டோம்!

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி, சமஸ்கிருதம் எல்லாம் அப்புறம் கொண்டுவாருங்கள் முதலில் “நதி நீர் இணைப்பும், அதற்கான திட்டங்களும். கடலுக்கு செல்லும் நீரின் அளவை பற்றிய விழிப்புனர்வையும்” கொண்டு வாருங்கள்!!

கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்து எப்படியோ ஓசூர் வந்து அங்கே காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும்!

#RequestToTamilNaduTransportation

 

அன்பு! வளம்!! வளர்ச்சி!!!

நிலையான ஆட்சி! நிரந்திர வளர்ச்சி!!

தமிழகமே எனது குடும்பம்!
தமிழ்நாடு மக்களே எம் பிள்ளைகள்!!
தமிழ்நாட்டு மக்களின் நலனே என் நலன்!!!

#100வது_நாளில்_படித்தது!

#தமிழினத்தின் #ஒப்பற்ற_தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், யார் குரல் குடுப்பது என்பதில் சற்றே குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்!!

தேச பக்தரும், சுதந்திரப் போராட்ட வீரரும், இலங்கைத் தமிழர் விசயத்தில் ராஜ்பக்கேவிற்கு ஆலோசனையும், கடல் நீர் பற்றிய அரிய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டவருமான அந்த மஹான் எங்கே?!

சுவாமிக்கே வெளிச்சம்!

ஒரு காலத்தில் பெங்களூரில் #கரை_வேட்டிகள் புடை சூழ நின்றதை நாசா விண்கலம் படம் பிடித்தது, இப்போது வெளியிடப் பட்டுள்ளது!!

கர்நாடகா பாஜகவுக்கும்….தமிழக பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை-பொன் ராதாகிருஷ்ணன்

எனக்கும் எனக்குமே சம்பந்தம் இல்லை , ஏன்னா என் பேரு சம்மந்தம் இல்லை!!

 

நண்பர்கள் அனைவருக்கும் #ஈகைத்_திருநாள் (#Eid_Mubarak) வாழ்த்துக்கள்!

பிரியாணியை எங்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல், தனி பார்சல் ஆகவே கொடுத்து “ஈகை”த்திருநாளைக் கொண்டாடுங்கள்!!

 

#குடிநீருக்கு தண்ணீர் வேண்டும் என்ற எந்த #மக்களும், #விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்ற எந்த விவசாயிகளும் #பஸ்ஸையோ, #லாரியையோ கொளுத்த மாட்டார்கள்.

பிறரின் உடைமைகளை அடித்துச் சேதப் படுத்த மாட்டார்கள். எந்த மக்களையும் அடிக்க மாட்டார்கள்!

ஆக இது சாதாரண மக்களாலோ , விவசாயிகளாலோ நடப்பதல்ல என்பது மட்டும் உண்மை. இதை தமிழக மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.

உணர்ச்சிவசப் படுவதைக் காட்டிலும் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது!

#Cauvery_issue #EnsureSafety #NeedActionOnViolence

Image result for ஆசிட் வீச்சு

ஒரு வழியாகப் பேசி அவள் வழக்கமாகப் பேருந்து ஏறும் அதே இடத்திற்கு, அந்த ஞாயிறு வர அவளை சம்மதிக்க வைத்திருந்தான் ராம். இன்றோடு  இதற்க்கு முடிவு கட்டிவிடலாம் என்பதே இருவரின் ஒருமித்த எண்ணமாக இருந்தது. அப்பொழுதுதான் சூரியன் சோம்பலை முறித்துக் கொண்டு விழித்திருந்தான் , பறவைகளின் சத்தங்களுக்கிடையே பசுமையான இலைகள் காற்றில் ஆடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்குப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள் அதிரா.

சரியான தாமதத்துடன் சுமார்  6.45 மணியளவில் அவள் முன்னால் ஒரு வித வேகத்தோடு  வந்து நின்றான் ராம். பைக்கை விட்டு இறங்கியவன், சுத்தி வளைக்காமல் நேரிடையாகவே முடிவாக என்னதான் சொல்கிறாய் அதிரா? என்றான் சற்றே அவரசமான தொனியில் ,அதில் காதலை விட ஒரு வித பிடிவாதம் தெரிந்தது.

ஆறு மாத காலமாக நீ என்னைக் காதலிக்கும் எண்ணத்தோடு பின் தொடர்கிறாய் என்பது தெரியும். எனக்கு உன் மீது மட்டுமில்லை, யார் மீதும் காதலில்லை, ஏன்  இப்போதைக்கு காதலிக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றாள் வயதை மீறிய தெளிவுடன். அந்தக் குரலில் பயமோ, அவசரமோ இல்லை மாறாக இயல்பான எண்ணத்தின்  வெளிப்பாடாகவே இருந்தது.

பேச்சு தொடர்ந்திருக்கும் போதே சட்டென்று அவன் அவசரம் விரக்தியாக மாறி நண்பகல் சூரியனின் சுவாலையைப் போல இந்தக் காலை வேளையிலும் கோபத்தின் எல்லைக்குச் சென்றவன் , சிறிதும் தாமதிக்காமல் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த  ஆசிட்டை அவள் முகத்தினில் வீசினான், அதில் சிதறிய துளிகள் அருகில் இருந்த மலர்களையும், மலரா மொட்டுக்களையும் பொசுக்கி இருந்தது.வலியிலும், வேதனையிலும் துடித்த அவள் “அண்ணா” என்று அலற, சட்டென முகம் வியர்த்து தூக்கம் கலைகிறது அசோக்கிற்கு.

அசோக் 6 மாதகாலமாக ஒரு பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். அவன் காதலை வெளிப்படுத்த பாஸ்ட் புட் போல ஆயிரம் உடனடி யோசனைகளைத் தந்து அவனைக் குழப்பி இருந்தார்கள்.எதிலும் சட்டெனக்  கோபப் படக் கூடிய அசோக்கிற்கு
பத்தாம் வகுப்பு படிக்கும் அதியா என்ற தங்கையும் உண்டு. நாளை என்ன செய்தாவது அவன் காதலுக்கு சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற ஒரு மாத கால மன உளைச்சலில் இருந்தவனுக்கு,கனவில் வந்த தன் தங்கை மீதான ஒரு(தறுதலைக்)தலைக் காதலனின் ஆசிட் வீச்சும், அவள் “அண்ணா” என்று அலறிய சத்தமும்  ஏதோ செய்தது.

அந்த கலங்கிய நிலையிலும், தன் காதலிக்குப் பிடித்தாலும்,பிடிக்க வில்லை என்றாலும் பொறுமை இழக்காமல் , நிதானத்தோடு தன் அன்பின் காதலை வெளிப்படுத்துவது என்ற திட முடிவுடன் உறங்கச் சென்றான்! இருள் சூழ்ந்த அந்த இரவில் மேகங்களுக்கிடையே சுதந்திரமாகவே உலாச் செல்கிறது அந்த நிலவு!

நீங்களே சொல்லுங்கள், காதல் என்பது ஓர் அன்பின் வெளிப்பாடு தானே?!

 

படங்கள்: கூகுள்
யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இவை எழுதப் பட்டதல்ல! அனைத்தும் கற்பனையே!!