Archive for November, 2015

உண்மையில் திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளதா ?!
இன்று தமிழ் நாட்டிலே திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளது போல ஒரு தோற்றம் நிலவுகிறது.அதன் நிலை என்ன ?

திராவிடம் என்பது என்னவோ வெறும் கடவுள் மறுப்பு என்ற ஒன்றை மட்டுமே முதன்மைப் படுத்துவதாய் மற்றவரால் பொய்ப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.
எதை எதிர்ப்பதற்கும், எதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதைப் பற்றிய புரிதல் அவசியம்..அந்த வகையில்  “திராவிட” புரிதல் அவசியம். எதையும் சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறில்லை. அந்தவகையில் திராவிடத்தையும் விமர்சிக்கலாம் ,விவாதிக்கலாம் ஆனால் அதனைப் புரிந்து கொண்டு செய்வதுதான் சரியாய் இருக்க முடியும். வெற்று எதிர்ப்பு என்பது சரியானதல்ல என்று நினைக்கறேன்.

திராவிட எதிர்ப்பு அதிகரிக்க வில்லை. எதிர்ப்பை அதிகரிக்க பலர் முயல்கிறார்கள் அவ்வளவே.