Archive for January, 2016

கேட்கத் தயாரெனில்?
அட்சயப் பாத்திரத்தின்
அமுதம் போலே
கதைகளுக்குக் குறைவில்லை
இந்தக் குழந்தைகளின் உலகினிலே!

படங்கள்: கூகிள்

இதுவரை… இனி… – ஹைதராபாத் பல்கலை. துணைவேந்தருக்கு ஒரு திறந்த மடல்

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

“தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாணவர் ரோஹித் மரணத்துக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி உலகம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 130 கல்வியாளர்கள் இணைந்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தின் முழு வடிவம்:

தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை இந்திய உயர் கல்வித்துறையில் தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இத்தருணத்தில் சர்வதேச அறிவுசார் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திடம் நீதி கேட்டு இந்த அவசர கோரிக்கையை முன்வைக்கிறோம்.

முதலில் ஐந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்ததே பல்கலைக்கழக நிர்வாகிகளின் சார்பு பார்வையின் வெளிப்பாடே. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க ஒரு சிறிய வாய்ப்புகூட வழங்கப்படவில்லை என்பது மற்றுமொரு அடக்குமுறை.

பல்கலைக்கழகத்தில் துடிப்புடன் வலம் வந்த ரோஹித் போன்ற இளைஞர்களின் கொள்கைகளை எதிர்த்து அரசியல் சார்புடைய சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டபோதெல்லாம் இதே நிர்வாகத்தினர் அவர்களை மன்னித்திருக்கின்றனர். ஆனால், தலித் மாணவர்கள் சிறு தவறு செய்தாலும் அதற்கு மன்னிப்பு கிடையாது என்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், மாணவர்கள் பிரச்சினைகளை தலித் / தலித் அல்லாதவர் என்ற முன்முடிவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் அணுகுவதே. இத்தகைய முன்முடிவுக்கு கொடுக்கப்பட்ட விலை மிகப்பெரியது. தண்டிக்கப்பட்ட 5 தலித் மாணவர்களில் ஒருவரான ரோஹித் வெமுலா ஜனவரி 17-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கான ஒரே நம்பிக்கை ஆதாரம் பறிக்கப்பட்ட விரக்தியின் வலியும், சுயமரியாதை சுட்டுப்பொசுக்கப்பட்ட வேதனையும் ரோஹித்தை எத்தகைய நெருக்கடிக்கு ஆளாக்கியது என்பதற்கு அவரது கடைசிக் கடிதம் தாங்கியுள்ள வார்த்தைகளே சாட்சி.

அந்தக் கடிதத்தில், தனது சுய அடையாளம் சாதியால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்ற வேதனையை ரோஹித் வெளிப்படுத்தியிருக்கிறார். ஓட்டுகளாக மட்டுமே தலித சமூகத்தினர் அடையாளம் காணப்படும் அவலத்தையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு தனி மனித வினைகளுக்குப் பின்புலத்திலும் ஏதாவது உந்து சக்தி இருக்கும் என்பதை அறிவுசார் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் அறிவோம்.

அந்த வகையில், ரோஹித் தற்கொலை ஒரு தனி மனித செய்கை மட்டும் அல்ல. இந்திய ஜனநாயக திருநாட்டில் உள்ள உயர்தர உயர் கல்வி நிறுவனங்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் அறிவையும், ஆளுமைத் திறனையும் போற்ற மறுத்து கடமை தவறியதால் ஏற்பட்ட விளைவு.

ரோஹித்தின் கனவுகள் கைகூடியிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் வேரூன்றிக் கிடக்கும் சில சார்பு முடிவுகளுக்கு ரோஹித் இரையாகிவிட்டார். இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் வியாபித்துள்ள சாதி பாகுபாடு ரோஹித்தைப் போல் பற்பல தலித் மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி தற்கொலை முடிவை தேட வைத்திருக்கிறது. தற்கொலை செய்துகொள்ள முடியாதவர்கள் சத்தமின்றி மேற்படிப்பை துறந்திருக்கின்றனர்.

சாதியின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் சிக்குண்டு இருக்கும் நிலையில், தெற்காசிய அறிவுசார் சமூக பிரதிநிதிகளாக நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ரோஹித் வெமுலாவுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மேலும் 4 மாணவர்களை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அது.

ரோஹித் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் இவை மட்டும் போதுமானது அல்ல. ரோஹித் மரணத்துக்கு நீதி கிடைக்கச் செய்வதோடு நின்றுவிடாமல் இனி எந்த ஒரு மாணவனுக்கும் இத்தகைய அநீதி நடைபெறாது என்பதையும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்.

பொது வாழ்விலும், ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் துடிப்புடன் செயல்பட்டு, பல்கலைக்கழகங்கள் வாழ்க்கையை படித்தறிவதற்கான தளம், சுய மாற்றத்துக்கான இடம் என்பதை பதிவு செய்த ரோஹித் போன்ற இளைஞர்களை ஊக்குவித்து, உருவாக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் தலையாய கடமை.

இத்தகைய மாணவர்கள் அவர்கள் சுயம் பாதிக்கப்படாமல் கல்வியைத் தொடர்வதற்கான வாய்புகளை உருவாக்கித் தருவது அவசியம்.

இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சாதியம், வெறுப்புணர்ச்சி மலிந்து கிடக்கும் என்ற போக்கை மாற்ற வேண்டும். இனி உயர்கல்வி நிறுவனங்களில் அடிஎடுத்து வைக்கும் தலித் சமூதகத்திலிருந்து வரும் மாணவனுக்கு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு இருக்குமோ என்ற ஐயமே எழக்கூடாது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் எதிர்கொள்ளும் சவாலான சூழல் அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் சாதியம் மழுங்கிவிடாமல் கண்னும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் சில அரசியல்வாதிகளாலும், சாதியத்தை எதிர்க்கும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சில பல்கலைக்கழக நிர்வாகத்தாலும் சர்வதேச அறிவுசார் சமூகத்தினர் மத்தியில் இந்தியாவின் பிம்பம் கறை படிந்ததாக காட்சியளிக்கிறது.

இந்த வேளையில், சாதிய பாகுபாட்டை நிறுவனமயமாக்குவதை நிறுத்திக் கொண்டு நம்பிக்கையை விதைக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து மாணவர்களும் சம மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மாணவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாங்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: பாரதி ஆனந்த்

கடிதத்தில் கையெழுத்திட்டோர் விவரம்:

1. Rupa Viswanath, Professor of Indian Religions, University of Göttingen, Germany

2. Joel Lee, Assistant Professor of Anthropology, Williams College, USA

3. Dwaipayan Sen, Assistant Professor of History, Amherst College, USA

4. Nathaniel Roberts, Research Fellow, Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Germany

5. Gajendran Ayyathurai, Postdoctoral Researcher, University of Göttingen, Germany

6. David Mosse, Professor, SOAS University of London, UK.

7. Karthikeyan Damodaran, PhD Scholar, University of Edinburgh.

8. Hugo Gorringe, Senior Lecturer, University of Edinburgh.

9. T. Dharmaraj, Visiting Professor, Centre for Modern Indian Studies, University of Göttingen.

10. Ania Loomba, Professor, University of Pennsylvania, USA.

11. Lalit Vachani, Research Fellow, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany

12. Srirupa Roy, Professor of State and Democracy, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany

13. Christophe Jaffrelot, Dr., CERI-Sciences Po/CNRS, Paris, France

14. Suvir Kaul, A. M. Rosenthal Professor, University of Pennsylvania, USA

15. Frank J. Korom, Professor of Religion and Anthropology, Boston University, USA

16. John Harriss, Professor, Simon Fraser University, Canada

17. Dilip Menon, Professor and Director, Centre for Indian Studies, University of Witwatersrand, South Africa

18. Raka Ray, Professor of Sociology and South and Southeast Asian Studies, University of California, Berkeley, USA.

19. Jonathan Spencer, Regius Professor of South Asian Language, Culture and Society, University of Edinburgh, UK

20. Constantine Nakassis, Assistant Professor of Anthropology, University of Chicago, USA

21. Sankaran Krishna, Professor of Political Science, University of Hawaii-Manoa, USA

22. Chandra Mallampalli, Professor of History, Westmont College, USA

23. Timothy Lubin, Professor, Washington and Lee University, USA

24. Linda Hess, Senior Lecturer, Stanford University, USA

25. Auritro Majumder, Assistant Professor, University of Houston, USA

26. P. Bagavandoss, Professor, Department of Biological Sciences, Kent State University, USA.

27. Shirin Rai, Professor of Politics and International Studies, University of Warwick, UK.

28. Indira Arumugam, Assistant Professor of Sociology, National University of Singapore

29. Michele Friedner, Assistant Professor, Stony Brook University, New York, USA

30. Dibyesh Anand, Associate Professor, University of Westminster, UK

31. Ravinder Kaur, Associate Professor, University of Copenhagen, Denmark.

32. James Caron, Lecturer in Islamicate South Asia, SOAS, University of London, UK.

33. Francis Cody, Associate Professor of Anthropology, University of Toronto, Canada.

34. Christopher Taylor, Assistant Professor of English, University of Chicago, USA

35. Alpa Shah, Associate Professor (Reader) of Anthropology, London School of Economics and Political Science, UK.

36. Bishnupriya Ghosh, Professor of English, University of California, Santa Barbara

37. Gloria Goodwin Raheja, Professor of Anthropology, University of Minnesota, USA

38. Anjali Arondekar, Associate Professor of Feminist Studies, University of California, Santa Cruz, USA

39. Nosheen Ali, Habib University, Karachi

40. Vazira Zamindar, Associate Professor of History, Brown University, USA

41. Kavita Philip, Professor of History, University of California at Irvine, USA

42. Bhavani Raman, Associate Professor, University of Toronto, Canada.

43. Subir Sinha, Development Studies, SOAS, London, UK.

44. Francesca Orsini, Professor, SOAS, London, UK.

45. Gilbert Achcar, Professor, SOAS, London, UK.

46. Nilanjan Sarkar, Deputy Director, South Asia Center, LSE, UK.

47. Jon Wilson, Senior Lecturer in History, King’s College, London, UK.

48. Peter van der Veer, Director and Professor at the Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany.

49. Tam Ngo, Researcher, Max-Planck-Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany

50. Shakuntala Banaji, Lecturer, London School of Economics and Political Science, UK

51. Meena Dhanda, Reader in Philosophy and Cultural Politics, University of Wolverhampton, UK

52. Goldie Osuri, Associate Professor of Sociology, University of Warwick, UK.

53. Shana Sippy, Visiting Scholar, Carleton College, USA

54. Sarah Hodges, Associate Professor, University of Warwick, UK

55. Mukulika Banerjee, Associate Professor of Anthropology and Director, South Asia Centre, London School of Economics, UK

56. Paula Chakravartty, Associate Professor, MCC and Galatin, New York University, USA

57. Narendra Subramanian, Professor of Political Science, McGill University, Canada, and Visiting Senior Research Fellow, Max-Planck-Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany.

58. Gurminder K Bhambra, Professor, University of Warwick

59. Rashmi Varma, Associate Professor, University of Warwick, UK

60. Uday Chandra, Assistant Professor of Government, Georgetown University, Qatar

61. Anupama Rao, Associate Professor of History, Barnard College, Columbia University, USA

62. Neena Mahadev, Postdoctoral Fellow, Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Germany.

63. Nusrat S Chowdhury, Assistant Professor of Anthropology, Amherst College, USA

64. Kavin Paulraj, Lecturer, Saint Mary’s College of California, USA

65. Asiya Alam, History Department, Louisiana State University, USA

66. Ananya Chakravarti, assistant professor of history, Georgetown University

67. Jesse Knutson, Assistant Professor of Sanskrit, University of Hawaii Manoa

68. Gopal Balakrishnan Professor, History of Consciousness, University of California Santa Cruz, USA

69. Geir Heierstad, Research Director, Norwegian Institute for Urban and Regional Research, Norway

70. Kenneth Bo Nielsen, Coordinator, Norwegian Network for Asian Studies, Norway.

71. Andrew Liu, Assistant Professor of History, Villanova University, USA

72. Toussaint Losier, Assistant Professor of Afro-American Studies, University of Massachusetts, Amherst, USA.

73. Pinky Hota, Assistant Professor of Anthropology, Smith College, Northampton MA

74. Madhumita Lahiri, Assistant Professor of English, University of Michigan, Ann Arbor, USA

75. Juned Shaikh, Assistant Professor, Department of History, University of California, Santa Cruz

76. Neilesh Bose, Canada Research Chair in Global and Comparative History University of Victoria

77. Lawrence Cohen, Professor and Director, Institute of South Asia Studies, University of California, Berkeley, USA

78. John Holmwood, Professor of Sociology, University of Nottingham, UK.

79. Balmurli Natrajan, Associate Professor, William Paterson University of New Jersey, USA.

80. Richard Alexander, Lecturer in Financial Law, SOAS University of London, UK.

81. Eleanor Newbigin, Senior Lecturer, SOAS, University of London

82. Chinnaiah Jangam, Assistant Professor of History, Carleton University, Canada.

83. Matthew J Nelson, Reader in Politics, SOAS, University of London.

84. Sîan Hawthorne, Lecturer in Critical Theory & the Study of Religions, SOAS, London, UK.

85. Amrita Shodhan, SOAS, University of London, UK.

86. Michael Hutt Professor and Director, SOAS South Asia Institute, University of London, UK

87. Jonathan Goodhand, Professor in Conflict and Development Studies, SOAS, University of London, UK

88. Nitasha Kaul, Author and academic, University of Westminster, London.

89. Deepankar Basu, Associate Professor, University of Massachusetts, Amherst.

90. Somak Biswas, Doctoral Candidate, Department of History, University of Warwick, UK

91. Michael Levien, Assistant Professor of Sociology, Johns Hopkins University, USA

92. Nilisha Vashist, M.Phil/PhD student, University College London, UK

93. Rama Mantena, Associate Professor of History, University of Illinois at Chicago, USA

94. Sohini Kar, Assistant Professor, London School of Economics and Political Science, UK

95. Dr. Jacob Copeman, Social Anthropology, University of Edinburgh.

96. Dr. Priyamvada Gopal, Cambridge University, UK.

97. Carole Spary, Assistant Professor, University of Nottingham, UK.

98. James Putzel, Professor of Development Studies, LSE, UK.

99. Romola Sanyal, Assistant Professor, London School of Economics and Political Science, UK

100. Dr Barnita Bagchi, Literary Studies, Utrecht University, Netherlands.

101. Dag Erik Berg, Postdoctoral Fellow, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany.

102. Dr Kalpana Wilson, London School of Economics, UK

103. Chetan Bhatt, Professor, Department of Sociology, London School of Economics and Political Science, UK

104. Rahul Rao, Senior Lecturer in Politics, SOAS, University of London, UK

105. Dr Alan Bullion, The Open University, UK

106. Katharine Adeney, Professor and Director of the Institute of Asia and Pacific Studies, University of Nottingham, UK

107. Dr. Mara Matta, Modern Literatures of the Indian Subcontinent, SAPIENZA Università di Roma, Italy

108. Pritam Singh, Professor of Economics, Oxford Brookes University, UK.

109. Dr. Sunil Kumar, Lecturer, London School of Economics, UK

110. Maitreesh Ghatak, Professor of Economics, London School of Economics and Political Science, UK

111. Richa Nagar, Professor, University of Minnesota, Twin Cities, USA

112. Mary Kaldor, Professor, London School of Economics and Political Science, UK

113. David Lewis, Professor of Social Policy, London School of Economics and Political Science, UK

114. Dr. Suthaharan Nadarajah, Lecturer, SOAS, University of London

115. Dr. Navtej Purewal, SOAS, University of London, UK

116. Shruti Sinha, Toulouse School of Economics, France.

117. Robert Cassen, Professor

118. Apurba Kundu, Deputy Dean, Anglia Ruskin University, UK.

119. Rachel McDermott, Associate Professor of Religion, Barnard College, Columbia University, USA.

120. Dr. Clarinda Still, Contemporary South Asian Studies Programme, University of Oxford, UK

121. Chad M. Bauman, Associate Professor of Religion, Butler University, USA.

122. Nandini Bhattacharya, Lecturer in History, University of Dundee, UK

123. Vijay Prashad, Professor, Trinity College, USA and Chief Editor, LeftWord Books.

124. Lucinda Ramberg, Assistant Professor, Cornell University, USA.

125. Pippa Virdee, Senior Lecturer in Modern South Asian History, De Montfort University, UK.

126. Andrew J. Nicholson, Associate Professor, State University of New York, Stony Brook

127. Dr. Teena Purohit, Department of Religion, Boston University.

128. Sahana Bajpaie, Instructor in Bengali, SOAS, University of London, UK.

129. M. V. Ramana, Physicist, Princeton University, USA

கடும் சாதிய நிழல் படிந்த தமிழக கல்வி நிறுவனங்கள்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

‘தமிழகத்தில் தலித் ஒடுக்குமுறை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது’

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இந்திய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுக்கச் செய்திருக்கிறது.

இந்தச் சூழலில், சாதி பாகுபாடு உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிரடி பட்ஜெட் குறைப்புகளும், அவசரகதி முடிவுகளும் ஒரு தலைமுறையையே எவ்வாறு துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், நெல்லையில் பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக வெவ்வேறு நிறத்திலான கைப்பட்டைகளை அணியும் பழக்கம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், சாதி பகட்டு மிகுந்த தென் மாவட்டங்களில் இது போன்ற சாதியை பறைசாற்றும் சாய பட்டைகள் அணிவது காலங்காலமாகவே இருந்து வருகிறது.

தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி ரீதியிலான பிரிவினைவாதம் எப்படி இழையாடியுள்ளது என்பதை உணர்த்துவதற்கு இதைவிட தெளிவான சான்று இருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாக நீளும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு 2012-ல் இளவரசன் படுகொலை மற்றுமொரு சாட்சியம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், வன்னியர் சமூகத்தைச் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) சேர்ந்த திவ்யாவுக்கும் இடையேயான காதல் சாதி மோதலாக மாற்றப்பட்டது. தருமபுரி சாதித் தீயால் பற்றி எரிந்தது.

தமிழகத்தில், இன்னமும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான சகிப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்துக்கு பின்னர், வட தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி, கலப்புத் திருமணங்களுக்கு எதிராக பல்வேறு அரசியல் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

கலப்பு திருமணங்களை ‘நாடகத் திருமணங்கள்’ என்று விழித்த பாமக, இதிலிருந்து தங்கள் சமூக பெண்களை பாதுகாக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது.

பாமகவின் இந்த அறைகூவல் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவச் சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவியது. அவர்களும், கலப்புத் திருமணங்களுக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். ‘கலப்புத் திருமணங்களுக்கு எதிரான பிரச்சார குழு’ என்ற பெயரில் ஒரு இயக்கமும் உருவானது. நாமக்கல் மாவட்ட கல்லூரிகளிலும் இது காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் விநியோகித்த துண்டு பிரசுரங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை எள்ளி நகையாடும் வாசகங்களின் நெடி இருந்தது.

இத்தைகைய சாதிக் கொடுமைகளுக்கு இன்னும் பல சான்றுகள் இருக்கின்றன.

மதுரை-விருதுநகர் எல்லையில் உள்ள குறையூர் எனும் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளாகவே தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது மேலுமொரு சான்று.

குறையூரில் அரசுப் பள்ளியிலேயே சாதி அடக்குமுறை இருப்பதால் அப்பகுதி தலித் மக்கள் தங்கள் பிள்ளைகளை மிஷனரி பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றிருக்கிறார் சாதி அடக்குமுறைக்கு எதிராக போராடும் எவிடன்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் கதிர்.

கல்வி நிறுவனங்களில் சாதிய ஆதிக்கம் குறித்து தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறும்போது, “மாணவர்கள் முன்பைவிட இப்போதுதான் சாதிய அடையாளங்களை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கள் சாதி தலைவர்கள் புகைப்படம் அடங்கிய லாக்கெட், பிரேஸ்லெட்டுகள் அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி நிலையங்களில் தீண்டாமை அப்பட்டமாக புழக்கத்தில் இல்லை. ஆனால், சில சலுகைகளை பெறுவதில் குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் முன்னுரிமை, சக மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் மரியாதை போன்ற விஷயங்களில் சாதி பாகுபாடு வெளிப்படுகிறது” என்றார்.

தலித் இலக்கியம்:

கல்வி நிறுவங்களில் நிலவும் சாதிய பாகுபாடுக்கு இன்னுமொரு சான்று தலித் இலக்கியங்களின் புறக்கணிப்பு. தென் மாவட்ட கல்லூரிகள் சில மிகக் கவனமாக, லாவகமாக தலித் இலக்கியங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளன. இதற்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட வகுப்பினரின் ஆதிக்கமே எனக் கூறுகிறார் தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழக கல்வி நிறுவனங்களில் எப்போது புகைந்து கொண்டிருக்கும் சாதி சில சமயங்களில் நெருப்பாக கொளுந்துவிட்டு எரிவதும் உண்டு.

அப்படித்தான், கடந்த 2008 நவம்பர் 12-ல், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகம் போர்க்களமானது. கல்லூரி விழா தொடர்பான போஸ்டரில் ஓபிசி வகுப்பு மாணவர்கள் அம்பேத்கர் என்ற பெயரை புறக்கணித்ததே பிரச்சினைக்கு காரணமானது. இதனையடுத்து தலித் சமூக மாணவர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி சன்முகம் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பின்னணில் சாதி அமைப்புகள் இருந்ததாக குறிப்பிட்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

சாதி ஆதிக்கம் குறித்து, எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மார்க்ஸ் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பேரசிரியர்களும் சாதி அடிப்படையில் குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்” என்றார். பல்கலைக்கழகங்களில் எஸ்.சி இடஒதுக்கீடு கீழ் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதேயில்லை என்று மேலும் ஒரு குற்றச்சாட்டை மார்க்ஸ் முன்வைத்தார்.

இது குறித்து சற்று விரிவாக விவரித்த அவர், தலித்துகளுக்கும் கல்வி நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து தப்பிக்க ஆதிக்க சாதியினர் கடைபிடிக்கும் பல்வேறு வழிவகைகளும் கூறினார். அவ்வாறாக பரவலாக கூறப்படும் சாக்கு, ‘திறமையானவர் கிடைக்கவில்லை அதனால் தலித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை’. இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பிரமர் மோடிக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு செயல்படுவதாக அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் தலித் மாணவர்கள் எத்தகைய பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதை மறக்க முடியாது எனக் கூறும் மார்க்ஸ், “மாநில அரசுக்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 49 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்காக அவர்கள் எடுத்த நடவடிக்கை என்னவோ மிகச் சொற்பமானதேஎன்றார்.

 

நேசிக்க மறந்தோமா நாம்?

சாதி, மொழி, நிறம், பிராந்தியம், தேசம் மற்றும் வர்க்க அடையாளங்கள் மற்றும் பிரிவினைகளைத் தாண்டி ஒரு மனிதன் சகமனிதனை நேசிப்பதற்கும் விடுவிப்பதற்கும் கல்வி உதவ வேண்டும். அத்தகைய சுதந்திரச் சிந்தனையை வளர்க்கும் கல்வியைத்தான் இந்தியப் பள்ளிகளும் உயர்கல்விக் கூடங்களும் வழங்க வேண்டும் என்று சுதந்திர இந்தியாவை நிர்மாணித்த தலைவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட தலித் ஆய்வு மாணவர் ரோகித் வேமூலாவின் தற்கொலை அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளைச் சிதைப்பதாகத்தான் உள்ளது. சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் பாகுபாடுகளும் வன்முறைகளும் நம் கண்ணுக்கே தெரியவராத இந்தியக் கிராமங்களில்தான் நிகழ்கிறது என்று பெரும்பாலானோர் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சாதி நமது வீடுகள், பள்ளிகள், விடுதிகள், கல்லூரிகள், உணவுப் பழக்கவழக்கங்கள், நாம் புழங்கும் பொதுவெளிகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. காதல், திருமணம் தொடங்கி வேலை, நட்புகள் வரை சாதி நவீன ரூபங்களில் நம்மைத் தொடரவே செய்கின்றன.

சமீப வருடங்களில் இந்தியாவெங்கும் பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களிலும் சாதிய அடையாளங்கள் அடிப்படையில் மாணவர்களிடையே மோதல்களும் பிரிவினைகளும் அதிகரித்துள்ளன. பாடப் புத்தகங்களிலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டத் தலைவர்களின் தேசப் பங்களிப்புகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழகப் பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவரும் தனித்தனி நிறங்களில் கைகளில் கயிறு கட்டி அணியணியாகத் திரளும் செய்திகளையும் சமீபத்தில் கேள்விப்பட்டுவருகிறோம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் உடல்வேலையில் ஈடுபடுத்தப்படுவதும் தரையில் உட்கார வைக்கப்பட்டுத் தனியாக மதிய உணவு வழங்கப்படும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. தலித் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகும் சதவீதமும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வியை இத்தகைய பாகுபாடுகள் மற்றும் நெருக்கடிகளை மீறி போராடி முடிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் இன்னொரு பெரிய சவால் காத்திருக்கிறது. அவர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் இடஒதுக்கீடு முறையே அவர்களை ஒதுக்கவும் ஒரு வகையில் காரணமாகிவிடுவதை என்னவென்று சொல்ல! இட ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்கு வரும் தலித் மாணவர்கள் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டியே அவமதிப்பைச் சந்திக்கின்றனர். கல்வி ரீதியாக, நிர்வாக ரீதியாக தொடர் புறக்கணிப்புகளுக்குள்ளாகி அவர்கள் தேர்வுகளில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. வளாகத்துக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன.

கல்விக்காக துரோணருக்கு விரலைக் கொடுத்த இதிகாச காலம் தொடங்கி, இன்று வரை அறிவும் வாய்ப்புகளும் சில வகுப்பினருக்கே என்னும் மனப்போக்கு இந்தியாவில் இன்னும் தொடர்வதற்கான அடையாளம்தான் ரோகித் வேமூலாவின் தற்கொலை.

கல்லூரிகளில் சாதி, சாதிய ஒடுக்குமுறை பற்றி உரையாடல் எழும்போதெல்லாம் இட ஒதுக்கீடு சார்ந்த விவாதமாக மாற்றப்படுகிறது. இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் குறைவான அறிவுடையவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான எந்தக் கோரிக்கையும் மதிப்பில்லாதவர்கள் கோரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பினும், உயர்கல்விக் கூடங்களிலும், நிர்வாக வட்டங்களிலும், ஆசிரியப் பணிகளிலும் உயர் சாதியினரே நிறைந்துள்ளனர். அந்த இடத்திலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன.

ரோகித் வேமூலா, யாகூப் மேமனின் மரண தண்டனை நிகழ்வைக் கண்டித்து மரண தண்டனைக்கு எதிராகப் போராடியவர். அம்பேத்கர் பெயரில் இயங்கிய மாணவர் அமைப்பில் செயலாற்றியவர். யாகூப் மேமன் மரண தண்டனையை எதிர்த்ததால், வளாகத்தில் இயங்கிய ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் எதிர்ப்பையும் புகார்களையும் சந்தித்தவர். மத்திய அமைச்சர் பண்டார தத்தாத்ரேயின் வலியுறுத்தலால் தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

ஒரு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையே நடந்த கருத்துவேறுபாடு, இத்தகைய பழிவாங்கலுக்கு எப்படி காரணியானது? ரோகித், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் விடுதி வளாகத்துக்கு வெளியே சில நாட்களின் இரவுகளில் தங்கி தன்னை மீண்டும் சேர்க்குமாறு போராடிய பிறகே தற்கொலை செய்துகொண்டார். உதவித்தொகையும் மறுக்கப்பட்டதால் அவரிடம் பணம் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி வளாகங்களில் செயல்படும் ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளால் எப்படி ஒரு தலித் மாணவருக்கு எதிராக நிர்வாகத்தைப் பணியவைக்க முடிகிறது? ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு மாணவரின் வெளியேற்றத்துக்குத் துணைபோக முடிகிறது?

கல்வி என்பது பிறரை, பிற வாழ்க்கை நிலைகளை நேசிக்கும் சாதனம் என்பதை மறந்துவரும் தலைமுறையா நாம்? அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எவ்வளவோ தொலைவையும் இடைவெளியையும் கடந்து தொடர்புகொள்ளும் ஊடகங்கள் பெருகிய காலத்தில் வாழ்ந்துவருகிறோம். ஆனால் அத்தனை ஊடகங்களிலும் பழைய வெறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லாரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம் என்று சென்ற நூற்றாண்டில் ஆல்பெர் காம்யு சொன்னது இப்போது மிகவும் உண்மையாக மாறியுள்ளது.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

ரோஹித்துகள் ஏன் இறக்கிறார்கள்?

பள்ளிப் பருவத்தில் தலித் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். ஒருமுறை, சற்றே வேடிக்கையாக அவனிடம் நான் இப்படிக் கேட்டேன்:

“நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஓரளவு வசதிதான். ஆனா, என்னை மாதிரி இல்லாம நீ மட்டும் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறியே. என் இடத்துக்கு நீயும் உன் இடத்துக்கு நானும் மாறிக்கொண்டால் என்ன?” அதற்கு அந்த நண்பன் சீரியஸாகவே பதில் சொன்னான்: “தோழா, ஒரு தலித்தாக இருப்பதுன்னா என்னன்னே உனக்குத் தெரியாது. ஒனக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது.”

அதற்கும் பல ஆண்டுகள் கழித்தே அந்த நண்பன் சொன்னதில் இருந்த வலியையும் பரிதவிப்பையும் நான் புரிந்துகொண்டேன். மற்றுமொரு தலித் நண்பன் (அவனுடைய பேர் ராமு என்று சும்மா வைத்துக்கொள்வோம்) தனது தோழி ஒருத்தியுடன் (அவள் பேர் ராணி என்று வைத்துக்கொள்வோம்) பேசிய விஷயத்தைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டபோதுதான் எனக்கு எல்லாமே உறைத்தது.

ராமு நல்ல பையன். என்ன… கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தனது சாதிப் பின்னணியை எப்போதுமே மறைக்க முயல்வான். ஆகவே, ராமு ஒரு தலித் என்பது ராணிக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பொதுவான நண்பன் ஷ்யாமுவைப் பற்றி அவர்கள் பேசியது இது:

ராணி:

“ஏய், ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷ்யாமு ஒரு தலித் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.”

ராமு:

“அப்படியா… அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!”

ராணி:

“ஆனா, அவள் ஒரு தலித் பொண்ணுப்பா.”

ராமு (தனது மனம் புண்பட்டதை மறைக்கும் விதத்தில்):

“இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முன்னே போய்க்கிட்டிருக்கு.”

ராணி:

“இருக்கலாம்பா, ஆனாலும்… ஒரு தலித் பொண்ணைப்போய்…?”

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ராணி முற்பட்ட வகுப்பை அல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். சாதிப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள்கூட இந்தச் சாதி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையில் சாதி அமைப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதன் அடையாளம்.

மோசமான அந்த அனுபவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூரும்போது ராமு என்னிடம் சொன்னான், “சகோதரா, இடஒதுக்கீட்டின் காரணமாக நல்ல வேலையைக்கூட ஓரளவு சுலபமாக என்னால் பெற்றுவிட முடியும். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவளோட அப்பா, அம்மாவை அதுக்குச் சம்மதிக்க வைக்கிறதுக்குத்தான் வாய்ப்பே இல்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ். பதவியை நான் வாங்குனாகூட ஆதிக்கச் சாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறது அவ்வளவு சுலபமில்லை.”

சாதி அடுக்கின் மேல்நிலையில், உயரிய அந்தஸ்துடன் இருக்கும் நாமெல்லாம் சாதியைப் பற்றியும் இடஒதுக்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பித்தால், பேச்சின் முடிவு ‘இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். நண்பர்களே, சாதிரீதியான பாகுபாடு என்பது நம்மால் நினைத்தே பார்க்க இயலாத அளவுக்குக் கொடுமையானது. இந்த உண்மையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால்தான், ரோஹித் வெமுலாக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ரோஹித் வெமுலாக்கள் ஏன் சாகிறார்கள் என்பதும் ‘மேல்சாதி’ குடும்பங்களில் பிறந்த நமக்குப் புரியும்!

– கரண் ராகவ் ஃபேஸ்புக் பதிவின் மொழிபெயர்ப்பு: தம்பி

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

சாதிக் கொடுமையின் மற்றொரு சாட்சி!

மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சியும் துயரமும் அளவிட முடியாதவை. தகுதியும் திறமையும் மிகுந்தவர்கள் என்று கருதப்படுவோரால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனமான இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். துடிப்பான ஆய்வு மாணவர்.

‘அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்’ (ஏ.எஸ்.ஏ.) என்ற அமைப்பின் உறுப்பினர். இச்சங்க உறுப்பினர்களுக்கும் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

பரிஷத் மாணவர்களின் புகாரின்பேரில் ஏ.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த ரோஹித் உள்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப் பட்டனர். ‘இந்த 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம் ஆனால் விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்துக்கோ, இதர பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சமூகரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பட்டமான சமூகப் புறக்கணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு எதிராக 5 மாணவர்களும் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில்தான் ரோஹித் வெமுலா என்ற அந்த ஆய்வு மாணவர் தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கையையும் ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்போ, காரணமோ அல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுதானா?

அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பில் தீவிரவாதிகளும் தேச விரோதிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தை அடுத்தே தற்கொலை நடந்தது என்று மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பண்டாரு தத்தாத்ரேய, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் பி. அப்பா ராவ் மற்றும் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த 2 தீவிர உறுப்பினர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரோஹித் தின் மரணம் குறித்து மனசாட்சியுடன் விசாரணை நடத்தி உண்மை களைக் கண்டறிய வேண்டும். சாதி ஆதிக்கத்தையும் சாதிப்பாகுபாட்டை யும் தடுக்க நாம் தொடர்ந்து தவறிவருகிறோம் என்ற அவலத்தையே இது இந்திய அரசுக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

அஜித் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கை பின்பற்ற வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சிலாகித்திருக்கிறார்.

பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ரஜினி முருகன்’. ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முதல் 4 நாட்களில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வசூலை ‘ரஜினி முருகன்’ தாண்டிவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

‘ரஜினி முருகன்’ படத்தை விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அஜித்துடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டபோது, “அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அஜித் சாரை பார்ப்பதற்கு போய் உட்கார்ந்திருந்தேன். பூஜையில் இருக்கிறார், உட்காருங்கள் என்றார்கள். அப்போதே எனக்கு பதற்றமாக இருந்தது.

அஜித் சார் பேச ஆரம்பித்தவுடன், வெளியில் அவ்வளவு கொண்டாடுகிறார்களே, அதை அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தெரிந்தது. இன்றைக்கு அஜித் சார் என்றால் ஒரு 10 நிமிடத்துக்கு கை தட்டல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அஜித் சாருடனான சந்திப்பு ஒரு 4 மணி நேரம் போனது. அவர் அவ்வளவு எதார்த்தமாக பேசினார். இதை நான் வேறு யாரிடமும் சொல்லவே இல்லை. ஏனென்றால், அதைச் சொல்லி நாம் விளம்பரமாக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அவரை நான் சந்தித்து ஒன்றரை வருடம் ஆகிறது. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்லவில்லை, அவருடைய வாழ்க்கையில் நடந்ததைத் தான் சொன்னார். அதை எப்படியாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.

அஜித் சாரிடம் உள்ள தன்னம்பிக்கையைத் தான் நான் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆலுமா டோலுமா பாடலின் போது அடிபட்டபோதும் கூட, பாடலை முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறார். அவருக்கு நிறைய அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சண்டைக்காட்சிகளில் நடிக்கிறார். அந்த தன்னம்பிக்கை சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வேண்டும் என நினைக்கிறேன்.

அஜித் சார் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பிஹெச்.டி படித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு மாணவர்களுக்கும், ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹித் வெமுலா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா?

மயிலாடுதுறை அருகிலுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவர் மீதும் விழுந்திருக்கும் பேரிடி. ‘‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’’ என்று கேட்கும் ஒவ்வொருவர் மனசாட்சிக்கும் விடப்பட்டிருக்கும் சவால். நம்முடைய ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரிகளையும் சாதி இன்றைக்கு எப்படித் தன் முன் வளைந்து நெளிந்து மண்டியிடவைத்திருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியம்!

திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த மூத்த தம்பதி குஞ்சம்மாள் – செல்லமுத்து. 85 வயது நிறைந்த குஞ்சம்மாள் கடந்த நவம்பர் 26-ல் காலமாகியிருக்கிறார். பல்லாண்டு காலமாக இங்கே ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் தனித்தனி சுடுகாடுகளே பராமரிக்கப்பட்டுவந்திருக்கின்றன. மேலும், தலித்துகள் பிணங்களை எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பொதுப் பாதையில் அனுமதிப்பதும் இல்லை. இந்நிலையில், மழை வெள்ளக் காலத்தில் குஞ்சம்மாள் இறந்தபோது அவர் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள். ஆதிக்கச் சாதியினர் வழக்கம்போல் மறுக்கவும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். முதலில் ஆதிக்கச் சாதியினரிடம் பேசிப்பார்த்த காவல் துறை, அவர்கள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் கடைசியில் தலித்துகளிடமே தங்கள் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். குஞ்சம்மாளின் சடலத்தை போலீஸாரே முன்னின்று தனிப் பாதையில் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில், ஜனவரி 3 அன்று 100 வயது நிரம்பிய செல்லமுத்து காலமானார். இப்போதும் அதே நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த அவருடைய உறவினர்கள், இம்முறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், மறுபடியும் அதே நிலை. 5 நாட்களுக்குப் பின் செல்லமுத்துவின் சடலத்தை முன்னின்று தனிப் பாதையில் கொண்டுசென்ற காவல் துறை, கூடவே தலித்துகளுக்குத் தடியடியும் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக நேரில் ஆய்வுசெய்யச் சென்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, ‘‘ஒரு தலித் முதியவரின் உடலுக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, துரதிர்ஷ்டவசமானது’’ என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்வு துரதிர்ஷ்டவ சமானது மட்டும் அல்ல; வெட்கக்கேடானது; ஒட்டுமொத்த மாநிலத்தையும் தலைகுனிய வைப்பது.

ஒரு அரசின் சார்பில் பேசும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை எல்லாவற்றையும் பரிகசித்து அவமானப்படுத்தி, வன்கொடுமையை ஆணவத்தோடும் பெருமிதத்தோடும் சாதியத்தால் செயல்படுத்த முடியும் என்றால், இங்கே நிர்வாகம் என்ற சொல்லுக்கான அர்த்தம்தான் என்ன? அரசு இயந்திரத்தைக் கையாளும் ஒரு மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் மீது மட்டும்தான் பிரச்சினை என்றால், அவர்கள் எப்படி இவ்வளவுக்குப் பிறகும் அங்கு பதவியில் நீடிக்கிறார்கள்?

இந்தியாவில் சாதியம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடக்கூடிய ஒரு சக்தியல்ல. நம் காலத்துக்குள்ளாகவே அதை அழித்துவிட முடியும் என்று நம்புவதும் பேராசைதான். ஆனால், நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சாதியத்துக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு அடியேனும் எடுத்துவைப்பதே சமத்துவத்தை நோக்கிய நீண்ட பயணத்துக்கான குறைந்தபட்சச் செயல்திட்டமாக இருக்க முடியும். இப்படிப்பட்ட பயணத்தில், அரசின் துணிச்சலான செயல்பாடுகளே சாதியரீதியாகப் பல நூற்றாண்டுகளாக அழுத்தத்திலிருக்கும் மக்களுக்கான மிக முக்கியமான பக்கபலம். சமீப காலமாக தமிழகத்தில் சாதிய சக்திகள் தங்கள் கோர விளையாட்டுகளை அதிகரிக்க ஆரம்பித்திருப்பதோடு, முன்பு இல்லாத துணிச்சலோடும் உற்சாகத்தோடும் வெளிப்படையாக அவை மார்தட்டிப் பீடுநடைபோடுவதையும் பார்க்க முடிகிறது. சுதந்திர தினத்தன்று சேஷசமுத்திரத்தில் நடந்த தேர் எரிப்புக்குப் பின் திருநாள்கொண்டசேரி மிக அபாயகரமான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் இந்த விஷயங்களில் காட்டும் அசாதாரண மவுனம், சூழலை மேலும் அச்சுறுத்துகிறது. இது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

Chennai NEXT அங்கீகரிக்க,அலச,அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்!

சென்னை நெக்ஸ்ட் என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தன்னார்வலர்கள் சார்ந்த குழுக்கள் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வு இன்று(ஜனவரி 10)குருநானக் கல்லூரி  வேளச்சேரியில் நடந்தது.  சென்னை பெருமழையில் தொண்டுள்ளம் புரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது.

அதில் ஒரு நிகழ்வாக சென்னை நெக்ஸ்ட் நடந்தது. தோழன் அமைப்பு , சட்டப் பஞ்சாயத்து அமைப்பு, லோக்சத்தா கட்சி போன்றவை சேர்ந்து நடத்திய நிகழ்வாய் இது இருந்தாலும் , மற்ற அமைப்பின் உறுப்பினர்களையும் , மற்ற அமைப்பையும் , தனி தன்னார்வலர்களையும் அங்கீகரிக்கத் தவறவில்லை என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையும் இந்த 3 அமைப்புகளுக்கும் ஒரு  சபாஷ்!

இந்த நிகழ்வில் பங்கேற்கக் காரணமாய் இருந்தது அதன் எளிமை. மிகப் பெரிய விளம்பரமாய் இல்லாமல் இயல்பாய் இருந்தது. இதில் பங்கேற்ற விருந்தினர்களும் எளிமையாய் இருந்தார்கள், உடையில் மட்டும் அல்ல நடந்து கொண்ட விதத்திலும். மற்ற விழா போல VIP க்கள் , கலந்து கொண்டவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றுதான் , எல்லோரும் VIP தான் என்பது போல அவ்வளவு எளிமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை வரிசை அமைந்து இருந்தது சிறப்பாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என சொல்லப் பட்டது,
1. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை அங்கீகரிப்பது.
விழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட  தன்னார்வலர்களை, குழுக்களை அங்கீகரித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள்!!

2. இதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்வது? இது போல நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என அலசி அதற்கான செயல் திட்டம் வகுப்பது.
விழாவில் சில செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டது அதன் தொடர்ச்சியாக அடுத்து சில கூட்டங்கள் நடக்க இருப்பதாய்க் கூறினார்கள்.

விவாதிக்கப் பட்ட பல விசியங்களில் சில,
1.வெள்ள நிவாரண பணி கணக்கெடுப்பை நியாமாக நடத்த கண்காணிப்பது, உதவி செய்வது.
2.சென்னையின் அந்த அந்த வார்டுகளை அந்த அந்த மக்களே சிறு குழுக்களாக நிர்வகிப்பது.
3.குப்பை மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம்,மழை நீர் சேகரிப்பு மையங்கள் பற்றிய விழிப்புணர்வு , செயல்திட்டம்.
4.வாக்காளர் பெயர் சேர்த்தல், ஓட்டளிப்பதை உறுதி படுத்துதல்  மற்றும் விழிப்புணர்வு.
5.லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு/லஞ்சமில்லா சேவைக்கு உதவி.

விழா விருந்தினர்களில்
டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் அவர்கள் முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி
(மற்றும்)
திரு. இளங்கோ ரங்கசாமி அவர்கள் விஞ்ஞானி,குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர்

இவ்விருவரின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் , இளங்கோ அவர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி விரைவில் அனைவரையும் சென்றடைந்துவிடும் ஆனால் மாற்றம் என்பது நிகழ கொஞ்சம் காலம் தேவைப்படும் ஆனால் நம்மால் முடியும் என்று ஊக்கம் தரும் விதத்தில் ஜெயபிரகாஷ் நாராயன் அவர்களும் , இளைஞர்கள் திறமைசாலிகள் அவர்களுக்கு எங்கள் அலோசனை , வழிகாட்டுதல் என்றும் உண்டு என்று முன் மாதிரி கிராமத்தை உருவாக்கிவரும் , அய்யா அப்துல் கலாம் அவர்களின் நண்பருமான இளங்கோ அவர்கள் பேசினார்கள்.

அய்யா இளங்கோவிடம் உங்கள் ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா என்றும் , உங்கள் முன்மாதிரி கிராமத்தை பார்க்கலாமா என்றும் கேட்டேன். நிச்சியமாக என்றார்!

அதோடு இளங்கோ என்று கூகிளில் தேடுங்கள் நாங்கள் செய்தது பற்றியும், எங்கள் கிராமம் பற்றியும் தகவல் கிடைக்கும் என்றார் மிக எளிமையாக!

விழா நாட்டு வாழ்த்தோடு ஆரம்பித்தது அதுவும் தமிழில்! சென்னை மழைக்கு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

மொத்தத்தில் இது விழா போன்று இல்லை சாதாரண மக்கள் கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது, நிறைவாய் இருந்தது!

#ChennaiNext

ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் அண்ணாவிற்கு நன்றி!